வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 18 மே, 2009

தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!! உண்மையா?

ன்னிப் போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது மகன் சார்லசு ஆண்டனியும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், இந்தச் செய்தியில் உண்மையில்லை; இது வெறும் வதந்தி; எஞ்சியுள்ள தமிழ் மக்களைப் பூண்டோடு அழித்தொழிக்க சிறிலங்கா மேற்கொள்ளும் வஞ்சகமான பொய்ப் பரப்புரை என்ற செய்திகளும் கசிந்துள்ளன.

இன்று காலைதான் அவர் உயிருடன் இருப்பதாக புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபன் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சில மணி நேரம் கழித்து பிரபாகரனை சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாக அரச தரப்பினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பி.நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியை உலக முன்னணி ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்டு வருகின்றன.

இவற்றையும் படிக்க:-

1.இரண்டாயிரம் போராளிகளுடன் பிரபாகரன் இருக்கிறார்

2.முற்றுகையை உடைத்துத் தலைவர் வெளியேறினார்

3.பிரபாகரன் குறித்த வதந்திகளை நம்பாதீர்

4.பிரபாகரன் இன்னும் களத்திலேயே உள்ளார்

5.பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உறுதிபடுத்தப்படவில்லை

6.பிரபாகரன் நலமாக இருக்கிறார்- பழ.நெடுமாறன்

7.தலைவர் பிரபாகரன் பற்றிய செய்திகளில் உண்மையில்லை

@ஆய்தன்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை: