வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 9 மே, 2009

எழுச்சி கொண்ட இனம்தான் வெல்லும்! வாழும்!


ஒர் உயிரினம் நீடித்து நிலைத்து வாழவேண்டும் என்றால் அந்த இனம் பலமுள்ள இனமாக இருக்க வேண்டும் என்பது டாவின்சியின் கோட்பாட்டுத் தத்துவம். ஒரு மனித இனம் நிலைத்து வாழவேண்டும் என்றால் பலம் மட்டும் போதாது, அது எழுச்சிகொண்ட இனமாகவும் இருக்க வேண்டும் என்பதே புதிய பூகோள தத்துவம். எழுச்சி கொண்ட இனம்தான் விடுதலை அடையும் எனபதே வரலாறு கூறும் தத்துவம்.

எழுச்சி கொள்வோம். விடுதலை அடைவோம்.
*வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழர்களைக் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
ஏனெனில் நான் வடக்கு, கிழக்கில் வாழ்வதில்லை

*பின்னர் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
ஏனெனில் நான் தென்னிலங்கையிலும் வாழ்வதில்லை
*பின்னர் தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
ஏனெனில் நான் தமிழ்நாட்டிலும் வாழ்வதில்லை

**இப்போது புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களைக் கொல்கிறார்கள்.
இப்போது என்னைக் காப்பாற்ற யாருமில்லை.....!!!

என்று சொல்லும் நிலையை வைக்காமல் இப்போதே விடுதலைக்காக வீதியில் இறங்குவோம்.

விடுதலை நமதாகும்! (மேலும் படிக்க)
  • பி.கு:-தமிழினப் படுகொலையைக் கண்டித்து மலேசியாவில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்.(விரிவான செய்தி)
@ஆய்தன்:-
எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே..
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே..

கருத்துகள் இல்லை: