வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 4 ஜூலை, 2009

'உயிர்த்தெழுவோம்' விடியலுக்குத் தொலைவில்லை..!

மலேசியத்தில் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சி



தமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும், வதை முகாம்களிலும் தினம்தோறும் அடிப்படை வசதிகள் இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து மீள் குடியேற்றவும், ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும், மலேசிய தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் “உயிர்த்தெழுவோம்” நிகழ்வு நடைப்பெறவுள்ளது.

அத்துடன், தமிழினப் படுகொலையைச் செய்த சிறீலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த குரல் கொடுக்க வேண்டியது மலேசிய தமிழ் மக்களின் கடப்பாடு ஆகும்.

இறுதிக்கட்டப் போரில் வீரச்சாவைச் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நாளாகவும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைப்பெறவுள்ளது.

நாள் : 5 சூலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : இரவு மணி 7.00 முதல்

இடம் : சாரணியர் மண்டபம், பிரிக்பீல்ட்டு. கோலாலம்பூர்.

இது அழுவதற்கான தருணம் அல்ல. அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுவோம். வீறுகொண்டெழுந்து தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க உலகத் தமிழ் மக்களுடன் சேர்ந்து உரிமைக் குரல் கொடுக்க தமிழ் இயக்கங்கள், உணர்வாளர்கள், ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலதிகத் தொடர்புகளுக்கு : 016-3262479 / 012-3142900 / 016-6031085

@செய்தி:-மலேசியாஇனறு

இத்தகு 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில், ஒரே காலத்தில் நடைபெறவிருக்கின்றன.

@ஆய்தன்:-
தமிழன் இல்லாத நாடில்லை!
ஆனால்..
தமிழனுக்கு ஒரு நாடு இல்லை!
அதனால்..
தமிழனுக்கு உலகில் நாதியில்லை!
ஆகவே..
தமிழன் உயிருக்கு எங்குமே மதிப்பில்லை!
இருந்தாலும்..
உயிர்த்தெழுவோம் விடியலுக்குத் தொலைவில்லை..!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மலேசியா கோலாலம்பூரில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற “உயிர்த்தெழுவோம்” நிகழ்வு

http://www.tamiltenral.blogspot.com/