வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 6 ஜூலை, 2009

மலேசியாவில் நடந்த 'உயிர்தெழுவோம்' நிகழ்ச்சி


உலகநாடுகளின் கூட்டுச் சதியால் சரிந்த தமிழர் சேனையின் சாம்பலிலிருந்து புறப்படும் புதுப்புயலாக கிளம்பியுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மலேசியத் தமிழ் உறவுகளின் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு மலேசியா கோலாலம்பூர் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.


6-7-2009 பிற்பகல் 5மணிக்கு பிரிக்பீல்ட்டு சாரணியர் மண்டபத்தில் உலகத்தமிழர் அறங்காவலர் சபைத் தலைவர் பசுபதி தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அகவணக்கம், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கரும்புலி மாவீரர்களுக்கு மக்களால் மலர் வணக்கம் செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து உயிர்த்தெழுவோம் நிகழ்வு உறுதியுரை வாசித்தளிக்கப்பட்டது. மற்றும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் திருமாவளவனின் எழுச்சிமிக்க உரை, தமிழீழ எழுச்சிப் பாடல்களுக்கான மாணவியரின் நாட்டியங்களும் நடைபெற்றன.


@நன்றி:- வர்மன்-தமிழ்த்தென்றல்

@ஆய்தன்:-
ஈழத் தாயகத்திற்கு வித்தாகிப் போயிருக்கும்
எமது வீரத்தமிழ் வேங்கைகளுக்கு வீரவணக்கம்!

கருத்துகள் இல்லை: