தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்குத் கவிஞர் தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு; இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாகச் சொல்பவர் தாமரை.
ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார்.
சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்.
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் அமைதிப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார்.
குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாய்க்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில்
“நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.
(விரிவாக)
@நன்றி:தமிழன்பன் பக்கம்
@ஆய்தன்:-
நாம் தமிழர்
நம் மறை திருக்குறள்
உண்மையறி தமிழா
உணர்ந்துகொள் தமிழா