வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 29 டிசம்பர், 2009

மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!



இனிய தமிழுயிர்ப் பெருமக்களே....


2010 ஆம் ஆண்டு முதல் தமிழுயிர் மீண்டும் தமது, தமிழ்ப்பணியை தொடரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரவித்துக்கொள்கிறோம்.

புதிய கோணத்தில் புதிய கருத்துக்கள் புதிய செய்திகள் உங்களை நாடி வரும்.

தமிழ், தமிழர் சார்ந்த சிந்தனை செறிவுகள் நாட்டு நடப்புககள் அரசியல் அலசல்கள், என பல்துறை பதிவுகள் இனி தமிழுயிரில் வெளிவரும்.


வாசகர்கள் வழக்கம் போல் தங்களின் வற்றாத ஆதரவை நல்கவும். உங்கள் உள்ளக் கிடைக்களை உள்ளது உளளபடி எழுதுங்கள்.

அன்புடன்,
தமிழுயிர் பணியில்,



ஆதவன்

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தமிழன் போத்திட்டாண்டா பொன்னாடை..!

தமிழகத்திலிருந்து தலைவர்கள் சில இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிந்ததே. அந்தப் பயணத்தின்போது நடந்த கண்கொள்ளாக் காட்சிதான் மேலே இருப்பது. அதைப் பற்றி குண்டுமணி வலைப்பதிவில் வந்த உரைவீச்சு இது.


போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..!

காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்திஅடித்தவனுக்கே..

தமிழன்பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்
சன நாய் அக வாதி
உலகில் உண்டோ சொல்
அவன் போல்வீரம்
உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன..
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின் எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.

தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா
தமிழாபாடு..!

@ஆய்தன்:-
பன்னாடைத் தமிழன் இருக்கும்வரை
பல்லாண்டா னாலும் எழமாட்டான் தமிழன்..!!

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

விழ விழ எழுவோம்..!


விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

மிகச் சுருக்கமாகத் தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கால் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தக் காணொளி பார்ப்பவர்களைக் கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.

இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


@நன்றி:தமிழ்த்தேசியம்


@ஆய்தன்:-
விழ விழ எழுவோம்
வேறூன்றி நிற்போம்
வின்னிலே ஏறுவோம்
வெற்றிக்கொடி கட்டுவோம்!

புதன், 23 செப்டம்பர், 2009

தமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்



(மேல் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்)
@ஆய்தன்:-
நாம் தமிழர் - நம் மறை திருக்குறள்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

தமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்

தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்குத் கவிஞர் தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு; இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாகச் சொல்பவர் தாமரை.

ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார்.

சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்.

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் அமைதிப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார்.

குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாய்க்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார். (விரிவாக)
@நன்றி:தமிழன்பன் பக்கம்
@ஆய்தன்:-
நாம் தமிழர்
நம் மறை திருக்குறள்
உண்மையறி தமிழா
உணர்ந்துகொள் தமிழா

திங்கள், 7 செப்டம்பர், 2009

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்: காணொளி

seeman @ Yahoo! Video

@ஆய்தன்:-
ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்
ஓடு பகையே ஓடு..!!

புதன், 2 செப்டம்பர், 2009

உலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உலகிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்திற்குச் சொந்தமானது.


உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி. (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
விதியே, விதியே, தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ? -பாரதி