வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 31 ஜூலை, 2009

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்:- இராணுவப் புலனாய்வுத் துறை


விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.


விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6வது மாடியை ராணுவத்தினர் சோதனை யிட்டுள்ளனர்.

எனினும், இராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.
இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர் என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாக இராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
@செய்தி: நக்கீரன்
@ஆய்தன்:-
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே - நம்
பொறுமையின் பொருள்மட்டும் விளங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள் - நாம்
அடிமையில்லை என்று முழங்கட்டுமே..!

வெள்ளி, 10 ஜூலை, 2009

ஈழம், நேற்று - இன்று - நாளை:- சீமான் நேர்க்காணல் காணொளி


பகுதி 1


பகுதி 2


பகுதி 3


ஆய்தன்:-
நிலம் வீழலாம்!-எங்கள்
நெஞ்சம் வீழாது!
களம் மாறலாம்-எங்கள்
உளம் மாறாது!
எல்லாம் முடிந்தது என்று
இறுமாந்திருக்காதே பகையே!
காலம் வரும்வரை பொறுத்திருப்போம்
கரும் புலிகளின் சாம்பலில் இருந்து
உயிர்தெழுவோம்!!!!!!!!!!!!

திங்கள், 6 ஜூலை, 2009

மலேசியாவில் நடந்த 'உயிர்தெழுவோம்' நிகழ்ச்சி


உலகநாடுகளின் கூட்டுச் சதியால் சரிந்த தமிழர் சேனையின் சாம்பலிலிருந்து புறப்படும் புதுப்புயலாக கிளம்பியுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மலேசியத் தமிழ் உறவுகளின் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு மலேசியா கோலாலம்பூர் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.


6-7-2009 பிற்பகல் 5மணிக்கு பிரிக்பீல்ட்டு சாரணியர் மண்டபத்தில் உலகத்தமிழர் அறங்காவலர் சபைத் தலைவர் பசுபதி தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அகவணக்கம், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கரும்புலி மாவீரர்களுக்கு மக்களால் மலர் வணக்கம் செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து உயிர்த்தெழுவோம் நிகழ்வு உறுதியுரை வாசித்தளிக்கப்பட்டது. மற்றும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் திருமாவளவனின் எழுச்சிமிக்க உரை, தமிழீழ எழுச்சிப் பாடல்களுக்கான மாணவியரின் நாட்டியங்களும் நடைபெற்றன.


@நன்றி:- வர்மன்-தமிழ்த்தென்றல்

@ஆய்தன்:-
ஈழத் தாயகத்திற்கு வித்தாகிப் போயிருக்கும்
எமது வீரத்தமிழ் வேங்கைகளுக்கு வீரவணக்கம்!

சனி, 4 ஜூலை, 2009

'உயிர்த்தெழுவோம்' விடியலுக்குத் தொலைவில்லை..!

மலேசியத்தில் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சி



தமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும், வதை முகாம்களிலும் தினம்தோறும் அடிப்படை வசதிகள் இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து மீள் குடியேற்றவும், ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும், மலேசிய தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் “உயிர்த்தெழுவோம்” நிகழ்வு நடைப்பெறவுள்ளது.

அத்துடன், தமிழினப் படுகொலையைச் செய்த சிறீலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த குரல் கொடுக்க வேண்டியது மலேசிய தமிழ் மக்களின் கடப்பாடு ஆகும்.

இறுதிக்கட்டப் போரில் வீரச்சாவைச் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நாளாகவும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைப்பெறவுள்ளது.

நாள் : 5 சூலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : இரவு மணி 7.00 முதல்

இடம் : சாரணியர் மண்டபம், பிரிக்பீல்ட்டு. கோலாலம்பூர்.

இது அழுவதற்கான தருணம் அல்ல. அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுவோம். வீறுகொண்டெழுந்து தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க உலகத் தமிழ் மக்களுடன் சேர்ந்து உரிமைக் குரல் கொடுக்க தமிழ் இயக்கங்கள், உணர்வாளர்கள், ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலதிகத் தொடர்புகளுக்கு : 016-3262479 / 012-3142900 / 016-6031085

@செய்தி:-மலேசியாஇனறு

இத்தகு 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில், ஒரே காலத்தில் நடைபெறவிருக்கின்றன.

@ஆய்தன்:-
தமிழன் இல்லாத நாடில்லை!
ஆனால்..
தமிழனுக்கு ஒரு நாடு இல்லை!
அதனால்..
தமிழனுக்கு உலகில் நாதியில்லை!
ஆகவே..
தமிழன் உயிருக்கு எங்குமே மதிப்பில்லை!
இருந்தாலும்..
உயிர்த்தெழுவோம் விடியலுக்குத் தொலைவில்லை..!

வியாழன், 2 ஜூலை, 2009

சிறிலங்காவில் தமிழினப் படுகொலை:- மலேசியா, சொகூரில் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றுள்ளது. தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இருக்கும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து 300,000 தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.


அந்தத் தடுப்பு முகாம்களில் தமிழர்கள் அனுபவிக்கும் அவலங்கள் எண்ணற்றவை. அம்முகாம்களில் போதுமான உணவு, குடிநீர், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் கிடையாது. பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் செத்து மடிகின்றன.

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இழைக்கும் இக்கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

மலேசியர்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்காக சொகூர் மாநில மனித உரிமைக்குழு (Johor Human Rights Group) ஒரு கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கண்டனக் கூட்டத்தில் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைவர் மருத்துவர் நசீர், சுவாராமின் நிகராளி நியாம், செம்பருத்தியின் கே.ஆறுமுகம் ஆகியோர் முறையே மலாய், சீன, தமிழ் மொழிகளில் உரையாற்றுவார்கள்.

மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் டத்தோ. சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றுவார்.

மலேசியர்கள் அனைவரும் இக்கண்டன கூட்டத்திற்கு திரண்டு வருமாறு சொகூர் மாநில மனித உரிமைக்குழு அழைக்கிறது.

சிறிலங்கா தமிழ் இனப்படுகொலை கண்டனக் கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும்:-

நாள்:- 05.07.2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:- பிற்பகல் மணி 2.00 லிருந்து
இடம்:- தேவான் ஆயாதி, மாவார் வளாகம், சுங்கை சாட் சாலை, சொகூர் பாரு.

மேல் விபாங்களுக்கு:-
நாகரத்தினம் 012-7571994 / செல்வகுமார் 013-7773030 / மோகன் 019-7102895

@செய்தி:-மலேசியாஇன்று
@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு! தமிழுக்காக ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு! தமிழருக்காக ஒன்றுபடு!