வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மெர்டேகா...! -ஏழு முறை சொல்லுங்கோ..

வளமிகு மலேசியத்தின் குடிமக்கள் அனைவருக்கும்

52ஆம் ஆண்டு விடுதலை(சுதந்திர) நாள் நல்வாழ்த்துகள்.

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!


@ஆய்தன்:-
ஒரே நாடு
ஒரே எண்ணம்
ஒரே இலக்கு
ஒரே மலேசியா

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

துப்பாக்கி முனையில் தமிழர்கள் படுகொலை:- சனல் 4 காட்சி


தமிழர்களை அழவைத்த
அந்தக் கொலைக்காட்சி
இதுவும் போதாதா உலகத்துக்கு
எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி....


இறந்த உடல்களெல்லாம்
நிர்வாணமாய் கிடக்க
உயிருள்ள ஓர் உறவின்
உயிர் குடிக்கிறது துப்பாக்கி.....
அவர் உதிரம் நிலம் நனைக்க
அவன் சிரிப்போசை கேட்கிறது....
நாம் சிந்திய இரத்தத்தில்
அவன் சந்தோசம் மிதக்கிறது.....


யார் இவர்கள்....?
எமைக் காத்த தெய்வங்களா....
இல்லை..
ஈழத்து இளம் மயிலா...
அல்லது...
எம் ஊரு காளைகளா....
எம் மொட்டுக்களின் பெற்றோரா...?


புலியாக இருந்தாலும்
பொதுமகனாக இருந்தாலும்
அவன் இறந்தது உனக்காக.....
உன் தேச மீட்புக்காக.......

கண்ணீரும் வற்றி விட்டோம்
கலங்க நேரமில்லை...
புலம்பெயர் உறவுகளே
புலம்ப பொழுதுமில்லை....
புகலிடமே ஒன்று சேரு
உன் பொறுமை நீங்கி போராடு
நீ ஒன்றுசேரத் தாமதித்தால்
மறுபடியும் ஓடும் அங்கே
தமிழன் இரத்த ஆறு....!!

ஆக்கம்:-இளங்கவி (யாழ் இணையம்)


முக்கிய அறிவிப்பு:- இளகிய மனமுள்ளவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது. (கொடூரத்தைப் படிக்க / பார்க்க)


@ஆய்தன்:-

இரத்தம் உறைகிறது..
குலை நடுங்குகிறது..
இதயம் வெடிக்கிறது..
உயிரின் வேர்வரை துடிக்கிறது..
என் ஈழத்துத்
தொப்புள்கொடி உறவின்
உயிர்பலி..
மரணவலி..!!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

கதற வைக்கும் காட்சிகள்..!!

கப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன். (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
எங்கு சென்றினும் எங்களுக்கேன் இந்நிலை
எதிரிக்கும் வாய்த்திடலாமோ எங்கள் நிலை!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

தமிழனுக்கு உலக முகவரி கொடுத்தவன் ஈழத்தமிழன்

@ஆய்தன்:-

வைரமுத்துவும் ஒரு போதிமரம்தான் - அவ்வப்போது

வைரத்தைப் போலொரு செய்தி தருவதால்..!

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈனத்தமிழர்கள் காண வேண்டிய ஈழச்சிறுவன் பேச்சு



@ஆய்தன்:-
தமிழ் இனத்தை மதிக்கிறான் ஈழத்தமிழன்!
தமிழ் இனத்தை மிதிக்கிறான் ஈனத்தமிழன்!