வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தமிழன் போத்திட்டாண்டா பொன்னாடை..!

தமிழகத்திலிருந்து தலைவர்கள் சில இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிந்ததே. அந்தப் பயணத்தின்போது நடந்த கண்கொள்ளாக் காட்சிதான் மேலே இருப்பது. அதைப் பற்றி குண்டுமணி வலைப்பதிவில் வந்த உரைவீச்சு இது.


போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..!

காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்திஅடித்தவனுக்கே..

தமிழன்பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்
சன நாய் அக வாதி
உலகில் உண்டோ சொல்
அவன் போல்வீரம்
உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன..
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின் எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.

தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா
தமிழாபாடு..!

@ஆய்தன்:-
பன்னாடைத் தமிழன் இருக்கும்வரை
பல்லாண்டா னாலும் எழமாட்டான் தமிழன்..!!

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

விழ விழ எழுவோம்..!


விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

மிகச் சுருக்கமாகத் தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கால் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தக் காணொளி பார்ப்பவர்களைக் கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.

இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


@நன்றி:தமிழ்த்தேசியம்


@ஆய்தன்:-
விழ விழ எழுவோம்
வேறூன்றி நிற்போம்
வின்னிலே ஏறுவோம்
வெற்றிக்கொடி கட்டுவோம்!