வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 25 ஜூன், 2009

தமிழ் இணையத்தளம் - வலைப்பதிவுகளுக்கு 'இளந்தமிழர் இயக்கம்' அவசர வேண்டுகை

மிழ் ஈழ ஆதரவு இணையத்தளங்களுக்கும் - வலைப்பதிவுகளுக்கும் தமிழகத்தில் செயல்படும் 'இளந்தமிழர் இயக்கம்' அவரச வேண்டுகை ஒன்றினை முன்வைத்துள்ளது. அதன் முழு அறிக்கை இது:-


இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன. பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம்.

புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் இணைய வலைப்பின்னலில் இந்திய உளவுத்துறையான றோ அமைப்பு ஊடுருவியுள்ளதாக அதிர்வு இணையம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்ததை நாம் அறிவோம்.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், சில இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

*தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,
*புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,
*சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,
*இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,
*கட்டாய ஆள் சேர்ப்பு

உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில், இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் சில இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்

@ஆய்தன்:-

தமிழீழத் தாயகமே நமது இலக்கு - எதிர்வரும்

தடைகளை எல்லாம் தூள்தூளாக நொறுக்கு...!!

ஞாயிறு, 21 ஜூன், 2009

தேசியத் தலைவர் இல்லை என்பது புலிகளின் புதிய போர் உத்தியா?



தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளியானது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக்கிறது.
பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.
"இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப் போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.
உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல்லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடுவோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.
ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் அசுத்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.
ஆனால், அசுத்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.
சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.
தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.
புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த அசுத்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடாவிலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை உருத்திரகுமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாசி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார்.
இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.
@நன்றி:-விகடன்

சனி, 20 ஜூன், 2009

"தேசியத் தலைவர் வீரமரணம்" என்று புலிகள் அறிவித்ததாக அறிக்கை



செய்திக்குப் போகும் முன்…


பின் வரும் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரையுடன் கூடிய அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் வீரமரணமடைந்தார் என முதலில் அதிகாரப் பூர்வமாக செல்வராசா பத்மநாதன் அறிக்கை விட்டபிறகு, அதனை மறுத்து தலைவர் நலமாக உள்ளார் என அறிவித்தது இந்த உளவுப் பிரிவுதான்.

அதே உளவுப் பிரிவு அலுவலகத்திலிருந்துதான் இந்த புதிய அறிக்கை ‘அறிவழகன்’ பெயரில் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை தமிழ்நெட் இன்னமும் வெளியிடவில்லை. மற்ற தளங்களில் பெரும்பாலானவை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையின் பின்னணி, இதில் வேறு ஏதேனும் ‘மறைபொருள்’ உள்ளதா என்பது குறித்து பின்னர் ஆராயலாம்… இப்போதைக்கு அமைதியாக இருப்போம் என்பதே இந்த அறிக்க சொல்லும் செய்தி!

முதலில் நாமும் இந்த அறிக்கையை அப்படியே வெளியிட்டோம். பின்னர் ஒரு முக்கியமான தலைவர் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் சிலரின் தொடர்ச்சியான விளக்கங்களின் பேரில் இந்த முன்குறிப்பைத் தருகிறோம்.

முதல்வர் கலைஞருக்கு இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனாலேயே அவர் அமைதி காப்பதாகவும் தமிழக உளவுத் துறை அதிகாரி ஒருவரும் மற்றும் தடவியல் துறையின் அதிகாரி ஒருவரும் சற்று முன் நம்மிடம் தெரிவித்தனர். அவர்கள் விவரம் இப்போதைக்கு வேண்டாம்.

மற்றபடி பிரபாகரன் குறித்து ஆயிரக்கணக்கான செய்திகளில் ஒன்றாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்…!

--------------------------------------

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம ராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

*தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச் சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன.

சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன.

அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் செல்வராசா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

குழப்பியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்…

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில், அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு.

அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் இலங்கை படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழீழ அரசுக்காக இணைந்து பாடுபடுவோம்…

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உயிருடன் இருப்பதாக கூறப்படும் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் குறித்து அறிவழகன் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டு எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------

இவ்வாறு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அறிவித்துள்ளதாக அந்த அறிக்கை கூறிக்கொண்டது.

@ஆய்தன்:-

*(தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச் சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.)

இங்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தேசியத் தலைவரை முக்கியமான இடத்துக்கு மாற்றும் போது எந்தத் தளபதியும் அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாமல் காப்பதற்குத் தானே நினைப்பர். ஆனால், இங்கு தலைவர் கொல்லப்பட்டு அவரின் உதவியாளர்கள் பத்திரமாக பாதுகாப்பு பகுதிக்கு வந்து விட்டதாக கதை செல்லப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 19 ஜூன், 2009

ஈழத்தில் இன்று நடந்தது எதுவும் முடிவல்ல.. தொடக்கம்!

நொச்சியும் முல்லையும்
நெய்தலும் பறிபோக
நூறாக நூறாக நூறாயிரமாகக்
கூறாகி நாராகிக்
குண்டேந்திச் சவமாகி
ஆறாகப் பாய்ந்திட்ட
அரும்புகளின் குருதிக்கு
சேறாகி அழுகும்
எம்செந்தமிழர் பிணத்துக்கு
சிங்களனே, இந்தியனே
சீனனே பதில் என்ன?

ஈழம் இனி...
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது என்று கருதிக் கூத்தாடுகின்றவர்கள், இலங்கையில் மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் இருக்கின்றார்கள். எந்த ஒரு போரிலும், களங்கள் மாறி மாறி வரும். களத்தை இழக்கும் போதெல்லாம், போரையே இழந்து விட்டதாக எண்ணிக் கலங்க வேண்டியதில்லை.
எந்த நோக்கத்திற்காகப் போர் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கும் வரை, போர் ஓய்வதில்லை.
ஈழ மக்களின் நல வாழ்வு, சனநாயக உரிமைகள் முதலானவற்றை மீட்டுக் கொள்வதற்காகவே, அங்கு விடுதலைப் போர் தொடங்கப்பட்டது. அவை முன்னிலும் இப்போது மோசமடைந்துள்ளனவே தவிர, முன்னேற்றம் என்பது முனையளவும் இல்லை. எனவே அங்கு இன்னொரு காலகட்டத்தில், இன்னொரு வடிவத்தில் அந்தப் போர் மையம் கொள்ளும் என்பதே உண்மை.
விடுதலைப் புலிகள் தங்களுக்காகப் போராடவில்லை. தங்களை அழித்துக் கொண்டு மக்களுக்காகப் போராடுபவர்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் அந்த மக்களைச் சுற்றியே சுழலும் தன்மையது என்பதை உண்மையானவர்கள் அறிவார்கள்.
அவரைக் குறை சொல்பவர்களுக்கும், கொச்சைப் படுத்துகின்றவர்களுக்கும் காலம் விடை சொல்லும்.
எமது தமிழ் ஈழப் போராட்டத்தில் - தாயகப் போராட்டத்தில் - தனிநாடு போராட்டத்தில் இன்று நடந்துவிட்டிருப்பவை எதுவும் முடிவல்ல... தொடக்கம்!
@ஆய்தன்:-
கலங்காதிரு மனமே - காலம்
கண்டிப்பாக பதில்சொல்லும்
காத்திரு மனமே..!!

செவ்வாய், 16 ஜூன், 2009

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது; தமிழரின் தாகம் தீரப் போகிறது!

இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும்.

எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை (16.6.2009) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த நிபுணர் குழுவில் மலேசியாவின் நிகராளியாக பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் பி.இராமசாமி அவர்களும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்கள் 9 முகாமையான விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. (விரிவான செய்தி)

@ஆய்தன்:-
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப்
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்..!

திங்கள், 15 ஜூன், 2009

உலக நாடுகளில் தமிழீழ மக்களவையை நிறுவும் திட்டம்


உலகப் பரப்பெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழீழ மக்களவைகளை, புலம்பெயர் தேசங்கள் தோறும் நாடுவாரியாக நிறுவுவதற்கான திட்டம் ஒன்று அனைத்துலகத் தொடர்பகத்தினால் கடந்தவாரம் முன்மொழியப்பட்டது.



இதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியக் கிளை தற்போது இறங்கியுள்ளது.

தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டு, தனித்துவமான கலைகளையும், பண்பாட்டையும், வரலாற்றையும், பொருண்மிய வாழ்வையும் தன்னகத்தே கொண்டமைந்த தேசிய இனமாக விளங்கும் ஈழத்தமிழர்கள், வரலாற்றுக்கு முன்னைய காலம்தொட்டு தலைமுறை தலைமுறையாக ஈழத்தீவில் தாம் வாழ்ந்து வரும் வரலாற்றுத் தாயகமாகிய தமிழீழ மண்ணில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களுக்கு இசைவாக விளங்கும் தமக்கேயுரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், சாதி, சமய, பெண்ணடிமைத்துவ, வர்க்க ஒடுக்குமுறைகள் நீங்கிய சமதர்ம தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான மக்கள் ஆணைக்கு வழிவகை செய்துகொடுத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வழிகாட்டலில், தமது அரசியல் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான சனநாயகக் கட்டமைப்பாக, தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் இவ்வாறான அவைகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உத்தேச தமிழீழ மக்களவைகளின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், பன்மைத்துவத்தையும், தாராண்மைத்துவத்தையும் நிலைநிறுத்தும் நீதியான - சனநாயக வழிதழுவிய தேர்தல் முறைமைகள் ஊடாக தெரிவு செய்யப்படுவர்.

படைவலிமையின் ஊடாக ஈழத்தமிழினத்தின் வரலாற்றுத் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழீழ தேசிய அடையாளத்தை சிதைத்து, ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையை மறுதலித்து, தேசிய உரிமைகளுக்கு அருகதையற்ற வந்தேறு குடிகளாக தமிழீழ மக்களை சிங்கள தேசம் சிறுமைப்படுத்தும் நெருக்கடி மிக்க தற்போதைய வரலாற்றுத் தருணத்தில் இவ்வாறான திட்டம் முன்மொழியப்படுகின்றது.

பன்னாட்டு மனிதநேய - மனிதவுரிமை விழுமியங்களையும், கடப்பாடுகளையும், சாசனங்களையும், சட்டங்களையும் அப்பட்டமாக மீறி, கொடிய போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் இழைத்து, தமிழ் குருதியிலும், தமிழர்களின் உடலங்களின் மீதும் வெற்றிவாகை சூடி, ஆயுத பலத்தின் ஊடாக ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை நசுக்கும் கொடுஞ்செயலில் ஈடுபடும் சிங்கள தேசத்துடன், இனியும் ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற வரலாற்று மெய்யுண்மையை உலக சமூகத்திற்கு வலியுறுத்தும் முதன்மை மக்கள் கட்டமைப்பாக இது விளங்கும்.

இதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு முன்னோடியாக, பிரித்தானிய வாழ் தமிழீழ மக்களினதும், ஏனைய உலகத் தமிழர்களினதும், கல்விமான்களினதும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும், அறிவுரைகளும், வழிகாட்டல்களும், விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.


தொடர்புகளுக்கு:-
makkalavai@yahoo.co.uk

@ஆய்தன்:-
ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின் (அதி:49 குறள்:484)

ஞாயிறு, 14 ஜூன், 2009

இலங்கையுடனான வணிகத்தைப் புறக்கணிக்க மலேசியாவிலிருந்து ஒரு கோரிக்கை

லங்கை அரசாங்கம் தனது வழிமுறைகளை சரிசெய்து, போரினால் சீரழிந்துள்ள பகுதியில் மனுக்குல நெருக்கடிக்கு தீர்வு காணும்வரை, அந்நாட்டுடனான வாணிகத்தை புறக்கணிக்கும்படி மலேசிய இந்தியர் வர்த்தகச் சங்கம் (மிபா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பி சிவக்குமார், இதனைச் சாதிக்கும்பொருட்டு, இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல் தொடுப்பதற்கு, இந்நாட்டில் உள்ள அனைத்து இந்திய வர்த்தக அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

“பேராசைக்கும் வாணிக வாய்ப்புகளுக்கும் மேலாக மனுக்குலத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்”, என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அங்கு நிகழ்ந்த கொடுஞ்செயல்களை நாம் பார்க்க வேண்டும், நமது குடிமையுணர்வு எங்கே? என்றவர் வினவினார்.

உலகாய புறக்கணிப்பு அமல்செய்யப்படும் வேளையில், இந்தியா அதற்கு முன்னோடியாகச் செயல்பட வேண்டும்.” (விரிவாக)

@ஆய்தன்:-
மனிதநேயம் பேணும் மலேசியாவின் மிபாவைத் 'தமிழுயிர்' வணங்குகிறது.
எரிகிற வீட்டில் பிடுங்கினது மிச்சம் என்பதுபோல, ஈழப் பிணங்களின் மீது பிரியாணியை வைத்துத் தின்பதற்குப் பெரும் வணிகர்களும் நிறுவனங்களும் அணியமாக இருப்பதாக ஒரு செய்தி படித்த நினைவு. அதுவும் இந்தியாவிலிருந்து..!! மனிதம் மரித்த மண்ணாக மாறிவிட்டதா புண்ணிய பூமியான இந்தியா.......?????

வியாழன், 11 ஜூன், 2009

தமிழர் மனங்களைத் திசை திருப்பும் முயற்சிகளை முறியடிப்போம்

புலிகள் தலைமையின் நிலைமை குறித்து இருவேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. என்றாலும், புலிகளின் முகமைத் தலைவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள் - இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது.
இந்த இக்கட்டு நிறைந்த சூழலில், தமிழர்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடிய வகையில் சில செய்திகள் பரப்பப்படுகின்றன. தமிழர்களின் நெஞ்சுரத்தை சிதறடிக்கும் வகையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நயவஞ்சகமாக - நாசுக்காக சில கட்டுரைகள் எழுதப்படுகின்றன.
மொத்தத்தில், தமிழர்களின் மனங்களைத் திசை திருப்பும் முயற்சியாக ஊடகப் போர் பாரிய அளவில் நடைபெறுகிறது. இந்த ஊடகப் போரைத் தமிழர்கள் முறியடிக்க வேண்டும்; நம்பிக்கையோடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
  • தமிழர்களின் நெஞ்சுரத்தை உரசிப்பார்த்த 2 கட்டுரைகள்
விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் குறித்த சரியான தகவல்களை அறிய தமிழர்கள் பெரிதும் நாடியவை தமிழ்நெட் மற்றும் புதினம் போன்றவைதான்.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லையா என்பது குறித்து இதுநாள் வரை அதிகாரப்பூர்வமாக இந்த இணையங்களில் எந்த செய்தியும் இல்லாமல் இருந்து வந்தது.

ஆனால் இப்போது, ‘பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதான்’ என்ற தொனியில் புதினம் தளத்தில் தி.வழுதி என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. 'முன்னாலே சென்றோரின் பின்னாலே சென்றவரின் வழியினிலே..' என்ற தலைப்பில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கூடவே, ‘தமிழரின் தேசிய தலைவர் என்ற பெருமைக்குரிய பிரபாகரன் இறவா அமரத்துவம் கொண்டவர்’ என்றும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

அதேநேரம், அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் புதினத்துக்கு ஏற்புடையவையா என்பது தெரியவில்லை.

இன்னொரு பக்கம் தமிழ்நெட் தளத்தில், ‘இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் மோசமான சூழலில் இருப்பது உண்மையே. ஆனால் மீண்டும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணையும் சூழல் உண்டாகி இருப்பதாகவும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துவிட்டு ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளை முன்னெடுப்போம், என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், மேற்கண்ட இரண்டு கட்டுரைக்கும் தக்க விளக்கமளிக்கும் வகையில் அதிர்வு இணையத்தில் கீழ்க்கண்ட செய்தி வெளிவந்துள்ளது. அதனை அப்படியே இங்கே முழுமையாகத் தருகின்றேன்.

  • தமிழர்களின் நெஞ்சுறுதியை வலுப்படுத்தும் அதிர்வு இணையக் கட்டுரை

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே!! என்ன ஒரு ஆக்கம்!! ஆம்... நாம் எதைப்பற்றி கூறுகின்றோம் என்பதை எமது வாசகர்கள் நன்கு அறிவார்கள். கடைசி நாள் போரில் 20,000 மக்கள் கொல்லப்பட்டும், முழு ஆண்டில் நடைபெற்ற போரில் 53,000 பேர் வரை கொல்லப்பட்டு, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் தடுப்புமுகாம்களில் கைதிகளாக உள்ள இந் நிலையில் இப்படி ஒரு விமர்சனம் தேவையா?

வெளிநாடுகளில் பல தமிழ் ஊடகங்கள் ஆய்வுக் கட்டுரை என்றபோர்வையில் தமிழர்களின் வீரத்தை, மானத்தை, தன்னம்பிக்கையை ஆராட்சி செய்கின்றன. இவர்கள் எழுதும் ஆராட்சிக் கட்டுரைகள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல மெல்ல மெல்ல எம் தமிழின மக்களிடையே நஞ்சைக் கலக்கின்றன. இவ்வாறான கட்டுரைகள் நமக்குத் தேவை என புலம்பெயர் தமிழர்கள் கேட்டார்களா? இவற்றை எல்லாம் பக்கம் பக்கமாக ஏன் எழுதவேண்டும்? இதில் இருந்து இவர்கள் கூறவருகின்ற கருத்துக்கள் தான் என்ன? இவர்களை யார் தூண்டி விடுகிறார்கள் என்பது தற்போது நன்கு விளங்கியிருக்கும்.

நாம் தற்போது மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறோம் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தளர்வடைந்துள்ள நிலையில், அது அரசியல் போராட்டமாக உருமாறி தற்போது புலம்பெயர் தமிழர்களாகிய எமது கைகளில் வீழ்ந்துள்ளது. நாம் அதனை செவ்வனவே செய்துவருவதால், பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு தள்ளப்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவாறாக, எமது போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் புலம் பெயர் தமிழர்களின் மனங்களை திசை திருப்பும் நோக்கில் இக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

தமிழீழத் தேசிய தலைவர் பற்றி பட்டிமன்றம் நடத்த யாருக்கு இங்கு அருகதை இருக்கிறது? தனது 14 வயதில் தனி ஈழம் காணப் புறப்பட்ட வீரன். தமிழ் வரலாற்றில் மாவீரன் நெப்போலியனை ஒத்த வீரனாகப் பார்க்கப்படுபவர், ஒரு கணனியும் தட்டச்சும் இருந்துவிட்டால் யாரும் கட்டுரை எழுதிவிடலாம். அதனை வாசிக்கும் எம் இன மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். இக்கட்டுரையில் தமிழீழப் போராட்டத்திற்கு மிகவும் உதவியவர்கள் என்று சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் இறந்துவிட்டனர், மிஞ்சியிருக்கும் ஒருவர் யார் என எமக்குத் தெரியும் அவரும் களம்சென்று போராடப் போவதாகக் கூறட்டும். கூறுவாரா?

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது தற்போதைய விவாதம் அல்ல. போராட்டமே எமது முழுமூச்சு, ஈழத்தில் நாள் தோறும் அல்லலுறும் எமது மக்களின் துயர்துடைக்கவேண்டும், அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கவேண்டும், அதை விடுத்து எமது திசையை திருப்ப முயலும் இவ்வாறான முன்னாலே சென்றோரின் பின்னால், அல்லது பின்னாலே சென்றோரின் முன்னால் எனக் கட்டுரைகள் எழுதி கவிழ்க்க நினைப்பவர்களை நாம் இனம் காணவேன்டும்.

கவிதை பாடிக் கவிழ்த்தார் கலைஞர்! இன்று கட்டுரை எழுதிக் கவிழ்கிறான் கயவன். மீண்டெழுவோம் தமிழர்களே.. ஒரு மனதாய் போராடுவோம், அதுவும் ஒன்றுபட்டுப் போராடுவோம்.. எமது வெற்றி நிச்சயம்..

@நன்றி:- என்வழி, அதிர்வு

@ஆய்தன்:-

தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கௌவும்..! இறுதியில், தருமமே வெல்லும்!

தமிழீழத் தாகம் அடங்கும்வரை அடங்கமாட்டோம்:- நவின இசைப்பாடல்



@ஆய்தன்:-

உன் படைப்புக்கள்

தாய் மொழிக்கும்......

தாய் நாட்டிற்கும்.......

தாய் நாட்டு மக்களுக்கும்........

பயனுள்ளவையாக இருக்கட்டும்......!


செவ்வாய், 9 ஜூன், 2009

தமிழன் நாடு அமைவதைக் கண்டு உலகமே அஞ்சுகிறது :- சீமான் உரை

பெங்களூரில் ஈழத் தமிழ் உறவுகளுக்காக நடத்தப்பட்ட பேரணியில், தமிழ் இனப் போராளி இயக்குநர் சீமான் ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் காணொளி இது.

"உலகில் அரிய விலங்குகள் அழிகின்றன என்பதற்காக சட்டங்கள் போட்டு பரிதவிக்கிற உலக நாடுகள், ஒரு மனித இனம் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?" என்ற அவரது கோபம் நியாயமானது - சரியானது - நீதியானது என்பதை கேட்பவர்கள் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார்கள்.. அவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமேயானால்.....!!!


பகுதி 1


பகுதி 2


பகுதி 3


@ஆய்தன்:-
நாடில்லா தமிழனைக் கண்டு - உலக
நாடுகளே அஞ்சுகின்றன..
நடுங்கிச் சாகின்றன..
அதனாலே தமிழனுக்கு
நயவஞ்சகம் செய்கின்றன..
நரித்தனம் புரிகின்றன..
நட்டாற்றில் தள்ளிவிட்டு - பிணம்போல
மௌனமாகி நிற்கின்றன..!

ஞாயிறு, 7 ஜூன், 2009

இலங்கையில்.. இந்த நவின காலத்தில்.. நாசி (NAZI) காலத்து முகாம்கள்?

@நன்றி:-யாழ் இணையம்

@ஆய்தன்:-

கண்ணிலுமினிய சுதந்திரம் போனபின்

கைகட்டிப் பிழைப்பாரோ?

மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை யிழப்பாரோ? -(பாரதியார்)

சனி, 6 ஜூன், 2009

வரலாறு காணா இனப்படுகொலையை மறைத்து, துரோகத்துக்குத் துணைபோனது ஐ.நா

நாம் வசிப்பது நாகரிக உலகில்தானா என்ற பெரியதொரு ஐயம் வருமளவுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டது ஐக்கிய நாடுகள் சபை. கண்முன்னே நடந்த ஒரு கொடுமையை - கொடூரத்தை - கொலைப் பாதகத்தைக் கண்டுகொள்ளாமலே போய்விட்டது ஐ.நா பேரவை. வரலாறு காணாத மாபெரும் இனப்படுகொலையை மறைத்து துரோகத்திற்குத் துணைபோய்விட்டது ஐ.நா.



ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு மன்றம் நேற்று (5-6-2009) விவாதித்தது.

இனி இலங்கைப் பிரச்சினை மற்றும் இனப்படுகொலை குறித்து ஏதும் பேசுவதாக இல்லை என்ற அறிவிப்புடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது ஐ.நா. பாதுகாப்புப் மன்றம்.

அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அப்படி எந்த விளக்கமும் தரவே இல்லை.

‘வில்லன்’களுடன் வந்த பான்!

இக்கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது ஆலோசகர்களான விஜய் நம்பியார் மற்றும் கிம் வோன் சூ ஆகியோருடன் கலந்து கொண்டார்.

பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிசல் மோன்டாசும் அவருடன் சென்றார். ஈழத் தமிழர் படுகொலையில் அனைத்தையும் திசைமாற்றி விட்டவர்கள் இந்த விசய், சதீசு நம்பியார்கள் என்பது நினைவிருக்கலாம். (இந்தியாவின் இன்னும் இரு மலையாள அதிகாரிகள் நாராயணன் மற்றும் மேனனும் தங்கள் பங்குக்கு இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு குழி பறித்தனர்.)

‘ராஜபக்சேவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்!’

பான் கி மூனிடம் செய்தியாளர்கள் அகதிகள்முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டபோது, “போர் பாதித்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களைப் பிடித்து வைத்திருப்பது குறித்து நான் அதிபர் இராசபக்சேவுடன் பேசியுள்ளேன். இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும் பேசியுள்ளேன்” என்றார்.

அப்போது உடன் இருந்த இலங்கை தூதர், சம்பந்தப்பட்ட மருத்துவர்களைச் சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு, இலங்கை சட்ட திட்டத்தின்படி அனுமதி தரப்படுகிறது என்றார்.

அகதிகள் முகாம்களிலிருந்து காணாமல் போன தமிழர்கள் குறித்தோ, கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்தோ பான் கி மூன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

நேற்றைய கூட்டத்தோடு இனிமேல் இலங்கை தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஆக, மனித குலத்தில் நடந்த பேரவலம் என்று கூறப்பட்ட ஒரு துயரத்தை, வெறும் கண்துடைப்பு வார்த்தைகளோடு முடித்துக் கொண்டுள்ளது ஐநா.

‘சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பிடிவாதம் காரணமாக ஒரு இனப்படுகொலையே முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் மவுன சாட்சியாக நிற்கின்றன.

இந்தியா உண்மையில் வல்லரசானால் அந்தப் பிராந்தியம் எந்த அளவு அதன் ஆதிக்க காலனியாக மாறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!’ என பிரிட்டிஷ் பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

@ஆய்தன்:-

உண்மையின் குரல்வளை..

அதிகாரக் கூட்டத்தினரால் நெறிக்கப்பட்டுவிட்டது!

நீதியின் கருவிழிகள்..

ஆதிக்க வருக்கத்தினரால் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது!

அறத்தின் உயிர்மூச்சு..

தற்கால காட்டுமிராண்டிகளால் துடிதுடிக்கப் பறிக்கப்பட்டுவிட்டது!

வெள்ளி, 5 ஜூன், 2009

சிறிலங்கா மீது ஐ.நா விசாரணை கூடாது: இந்தியா மீண்டும் எதிர்ப்பு



லங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, இந்த விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 11 ஆவது கூட்டத்தொடர் கடந்த 2 ஆம் நாள் தொடங்கி எதிர்வரும் 19 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா தொடர்பாக கடந்த 25, 26 ஆம் நாட்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்.

நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை இந்திய தூதுவர் கோபிநாதன் ஆச்சம்குலங்காரே எதிர்த்ததுடன் அவர் அங்கு தனது கருத்தையும் முன்வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தை நவநீதம்பிள்ளை வரவேற்றிருக்கிறாரே தவிர அன்றைய நாள் சிறிலங்காவுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் வரவேற்கவில்லை. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு சபைக்கு உகந்தது அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற அமர்வில் செக் குடியரசு, பிரான்சு, பிரித்தானியா, சப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளும் இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை என்று இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றிவிடும் முயற்சிகளிலேயே இந்த கூட்டத்தொடரில் காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளே சிறிலங்கா தொடர்பான அனைத்துலக விசாரணையை வலியுறுத்த தொடங்கியுள்ள நிலையில் இந்தியா தொடர்ந்தும் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருவது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் வரவேற்று உரையாற்றியிருந்தன.
@ஆய்தன்:-
இந்தியா.. இந்தியன்.. என்பதெல்லாம் போலி! மாயை! ஏமாற்று வேலை! என்பதும் - இந்தியாவும்.. இந்தியனும்தான் தமிழுக்கும் தமிழருக்கும் முதல் எதிரி.. பகையாளி.. பச்சை துரோகி!
இந்தியாவை நம்பி; இந்தியன் என்று நம்பி, முட்டாளாய்.. மடையனாய்.. அடிமையாய் இருந்தது போதும்!
இனி, தமிழனென்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா..!

வியாழன், 4 ஜூன், 2009

தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களில் விளக்க முடியாது: சிறிலங்கா தலைமை நீதிபதி


முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை சொற்களில் விளக்க முடியாது என்று சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா கவலை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள மாரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள 'நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்களின் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது.

நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும்.

இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் வாழும் செட்டிக்குளம் முகாம்களுக்கு நான் சென்றிருந்தேன். அவர்களின் பரிதாப நிலையை என்னால் விளக்க முடியாது. அவர்களுக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அளவற்ற துன்பத்துக்கும் இடர்களுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.

நமது பகுதிகளில் நாம் மாபெரும் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். ஆனால் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூடாரங்களில் வாழ்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் தங்கியுள்ளனர். கூடாரத்தின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்கள் நேராக நிமிர்ந்து நிற்க முடியும்.

கூடாரத்தின் மற்ற பக்கத்தில் நிமிர்ந்தால் கழுத்து முறிந்துவிடும். கழிப்பிடங்களுக்குச் செல்வதற்குக்கூட அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

என் உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம்.

இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை.

இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.


@ஆய்தன்:-
நல்லவன் வாழ்வான்..!

புதன், 3 ஜூன், 2009

பரபரப்புச் செய்தி:- பிரபாகரன் மகன்களில் 2 சார்லசு ஆண்டனிகளா?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்லசு ஆண்டனி மரணச் செய்தியில் இப்படியும் கூட இருக்குமா? விறுவிறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.

பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்லசு ஆண்டனிகள் இருக்கிறார்களாம்!

இதுவரை ஈழத்தில் நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன.

கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் “தீ”.

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லசு ஆண்டனியும் அந்த அமைப்பின் முக்கிய 17 தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என்ற செய்திதான் அது.

சார்லசு ஆண்டனி பிணமாகக் காட்சியளிக்கும் வீடியோ படங்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் பரபரக்க வைத்தன.

இது சாத்தியமான சம்பவம்தானா? (விரிவாக)

@நன்றி:-தமிழ்வின்