வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 2 ஜூலை, 2009

சிறிலங்காவில் தமிழினப் படுகொலை:- மலேசியா, சொகூரில் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றுள்ளது. தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இருக்கும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து 300,000 தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.


அந்தத் தடுப்பு முகாம்களில் தமிழர்கள் அனுபவிக்கும் அவலங்கள் எண்ணற்றவை. அம்முகாம்களில் போதுமான உணவு, குடிநீர், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் கிடையாது. பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் செத்து மடிகின்றன.

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இழைக்கும் இக்கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

மலேசியர்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்காக சொகூர் மாநில மனித உரிமைக்குழு (Johor Human Rights Group) ஒரு கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கண்டனக் கூட்டத்தில் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைவர் மருத்துவர் நசீர், சுவாராமின் நிகராளி நியாம், செம்பருத்தியின் கே.ஆறுமுகம் ஆகியோர் முறையே மலாய், சீன, தமிழ் மொழிகளில் உரையாற்றுவார்கள்.

மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் டத்தோ. சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றுவார்.

மலேசியர்கள் அனைவரும் இக்கண்டன கூட்டத்திற்கு திரண்டு வருமாறு சொகூர் மாநில மனித உரிமைக்குழு அழைக்கிறது.

சிறிலங்கா தமிழ் இனப்படுகொலை கண்டனக் கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும்:-

நாள்:- 05.07.2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:- பிற்பகல் மணி 2.00 லிருந்து
இடம்:- தேவான் ஆயாதி, மாவார் வளாகம், சுங்கை சாட் சாலை, சொகூர் பாரு.

மேல் விபாங்களுக்கு:-
நாகரத்தினம் 012-7571994 / செல்வகுமார் 013-7773030 / மோகன் 019-7102895

@செய்தி:-மலேசியாஇன்று
@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு! தமிழுக்காக ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு! தமிழருக்காக ஒன்றுபடு!

கருத்துகள் இல்லை: