வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 27 ஏப்ரல், 2009

ஈழத்தில் இன்று இரவு கடும் இராணுவத் தாக்குதல்?


இன்று இரவுடன் மீதமுள்ள பகுதிகள் மீது தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக இராணுவம் கடும் தாக்குதல் தொடுக்க இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரசாயன ஆயுதங்கள், பல்குழல் எறிகணை, மற்றும் கனரக ஆயுதங்கள் சகிதம் இராணுவம் தயாராகி வருவதாகக் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் திட்டமிட்ட தாக்குதலை இலங்கை இராணுவம் தொடுக்குமாயின், ஓர் இரவில் மட்டும் 10,000 தமிழர்கள் கொல்லப்படும் வாய்ப்பு இருப்பதாக அறியப்படுகிறது. எனவே புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே உடனடியாக தங்கள் நாட்டில் உள்ள பாரளுமன்றம் முன்பாக கூடி, அல்லது கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் கூடி இறுதி இன அழிப்புப் போரைத் தடுக்க ஆவன செய்யுமாறு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது. (விரிவாக)
@நன்றி:அதிர்வு

கருத்துகள் இல்லை: