வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

எனது மக்களுக்காக எனது போராட்டம் இது

தமிழர் தாயகத்தில் அவலப்படும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிட்டும்வரை தனது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள சுப்பிரமணியம் பரமேசுவரன். அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தனது உயிரை மாய்த்தே ஈர்க்கும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் 11 ஆவது நாளாக சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வீதியின் ஓரத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருக்கும் அவர், தனது போராட்டம் குறித்து புதினத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்:-

"எமது மக்களுக்கு ஏதாவது என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக நான் எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமாக எனக்கு கிடைத்திருக்கிறது." (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
சாதலின் இன்னாத தில்லை; இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை (அதி:23 குறள்:230)

கருத்துகள் இல்லை: