வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

இந்திய அரசைக் கண்டித்து மலேசியாவில் பேரணி

ஈழத் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்த மண்ணில் இருந்து முற்றாக அழிக்கும் நோக்கத்தோடு இலங்கையில் இடம்பெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அதிநவீன இராணுவத் தளவாடங்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், இராணுவ வல்லுநர்களை வழங்கி தமிழினப் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசை வன்மையாகக் கண்டித்து மலேசியாவில் இன்று(21-4-2009) நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
@நன்றி: புதினம்
@ஆய்தன்:-
தமிழனை அழிக்கத் துடிக்கும் இந்தியாவை நம்பும்.. தன்னை இந்தியன் என நம்பும்.. இந்தியா தன்னைக் காக்கும் என நம்பும்.. மலேசியத் தமிழர்கள் இனியேனும் கண் திறவுங்கள்..!
இந்திய அடிமை விலங்கொடியுங்கள்..!
நாம் தமிழர் என முழங்குங்கள்..!

கருத்துகள் இல்லை: