வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

தமிழ் மணக்கும் பினாங்கு


பினாங்கு மாநிலத்தில் 'மக்கள் மடல்' என்ற ஒரு செய்தியிதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த இதழ் பினாங்கு மாநில அரசினால் வெளியிடப்பெறுகிறது. முற்றும் முழுவதுமாக தமிழில் இந்த இதழ் வெளிவருகிறது. இந்த நாட்டில் ஒரு மாநில அரசு இத்தகையதோர் இதழை வெளியிட்டு வருவது; அதுவும் தமிழில் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியதும்; வியப்புக்குரியதுமாகும். தமிழுக்கும் எமது தமிழ் மக்களுக்கும் பினாங்கு அரசு வழங்கியிருக்கும் மிக உயர்வான மரியாதையாக இதனைப் போற்ற வேண்டும். பினாங்கு மாநில நடப்புகளையும் மக்களுக்குப் பயன்மிக்க செய்திகளையும் கட்டுரைகளையும் தாங்கி தரமான தாள்களில் அச்சிடப்பட்டு எட்டு கண்கவர் வண்ணப்பக்கங்களோடு இந்த 'மக்கள் மடல்' இதழ் வெளிவருவது, பினாங்கு வாழ் தமிழர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்கே பெருமைக்குரிய செய்தியாகும். மற்றைய மொழிகளுக்குத் தரப்படும் அதே மரியாதையையும் உரிமையையும் நடுவுநிலைமையோடு தமிழுக்கும் வழங்கியிருக்கும் பினாங்கு மாநில முதல்வர் தான்ஸ்ரீ கோ சூ கூன் அவர்களுக்கும் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மாண்புமிகு பி.கே.சுப்பையா அவர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் 'தமிழுயிர்' வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

  • ஆய்தன் : மற்ற மாநில ஆட்சிக்குழு செவிகளில் நம்மின மாண்புமிகுகள் இதைப்பற்றி சங்கு ஊதலாமே!

கருத்துகள் இல்லை: