வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

இரட்டை வேடம் போடும் இரசினிகாந்து

கதையைப் படிப்பதற்கு முன்னால் ஒரு பாட்டு. இதோ:-

அடிச்சான் பாரு பல்டி! - அவன
அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

வாரிக் கொடுத்தது தமிழ்நாடு
வாழ வைத்தது தமிழ்ப்பாலு
பாட்டுதான் பாடி வச்சான் படத்துல – தமிழனுக்கு
வேட்டுதான் வச்சுப்புட்டான் இடுப்புல!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

பத்தி எரிஞ்சது ஒக்கேனக்கல்
செத்து மடிஞ்சது தமிழ்மக்கள்
வேடம் போட்டு ஓடிவந்தான் குள்ளநரி – தமிழனுக்கு
மேட போட்டு குரல்கொடுத்தான் மொள்ளமாரி!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

படமெடுத்தான் குசேலன்னு பேரு
தடபோட்டான் கன்னடத்து ஆளு
ஓடிப்போயி நக்கிட்டான்யா காலத்தான் – தமிழனுக்கு
வெடியவச்சி கிளப்பிட்டான்யா தூளுதான்!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

சோறுபோட்ட தமிழனத்தான் மறந்துட்டான்
சுயநலந்தான் பெரிதெனவே காட்டிட்டான்
தன் இனமும் தன் மொழியும் பெரிசா போச்சு – தமிழனுக்குத்
தலையிலதான் மூனு நாமம் மிச்சமாச்சு!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

இப்பவாச்சும் முழிச்சிக்கோடா தமிழா
எதிரிமூஞ்சைக் கிழிச்சுப்போடு தமிழா
சூடு சுரணை இன்னும் இருக்கும் இனமா? தமிழா நீ
செத்துவிட்ட நாரிப்போன பிணமா?

அடிச்சான் பாரு பல்டி! - அவன
அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

...பாட்டு முடிந்தது. இனி, கதைக்கு வருவோம்..

**இது பழைய கதை:-
கடந்த மார்ச்சு 2008இல் தமிழ்நாடு ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தடுத்து கன்னட வெறியர்கள் கருநாடகத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; திரையரங்குகள் கொளுத்தப்பட்டன; தமிழகப் பேருந்துகள் எரிக்கப்பட்டன; கருநாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர். இந்த வெறித்தனத்திற்குக் கண்டனம் தெரிவித்து ஏப்பிரல் 4ஆம் நாள் தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் மாபெரும் எதிர்ப்புக்கூட்டம் ஒன்றினை நடத்தினர். இக்கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக 'சூப்பரு சுட்டாரு' இரசினிகாந்தும் கலந்துகொண்டார். மேடையில் தோன்றிய இரசினி, கன்னட வெறியர்களைக் கண்டிப்பது போலவும் அப்பாவித் தமிழ் மக்களை ஆதரிப்பது போலவும் உளறிக்கொட்டிக் கிளறிமுடினார்.

**இது புதிய கதை:-

கடந்த 1.8.2008இல் 'சூப்பரு சுட்டாரு' இரசினிகாந்து நடித்த 'குசேலன்' படம் வெளிவந்தது. அந்தப் படத்தைக் கருநாடகத்தில் திரையிடக்கூடாது என கண்டித்து அதே கன்னடர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்; இரசினியின் படத்தை எரித்தனர். உடனே, இர‌சினிகா‌ந்‌‌து க‌ன்னட த‌னியா‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்று‌‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ஒகேன‌‌க்க‌ல் ‌பிர‌ச்‌சனையி‌‌ன் போது தா‌ன் பே‌சிய பே‌ச்சு‌க்காக வரு‌த்த‌ம் தெ‌ரி‌‌வித்தார். "இ‌ந்த ‌நிக‌ழ்வு என‌க்குப் பாட‌த்தைக் க‌ற்று‌த்த‌ந்து‌ள்ளது. இது போ‌ன்ற தவறை நா‌‌ன் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்யமா‌ட்டே‌ன். நான் கருநாடகத்தில் பிறந்தவன். கருநாடகத்தில் 'பஸ் கண்டக்டராக' வேலை செய்தவன். அந்தத் தொழில்தான் இன்று என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. எ‌ன்னை‌ எ‌தி‌ர்‌‌க்கு‌ம் ம‌க்க‌ளு‌ம் க‌ர்நாடகா‌வி‌‌ன் குழ‌ந்தைக‌ள். அவ‌ர்க‌ள், அவ‌ர்களுடைய மா‌நில‌த்‌தி‌ற்காக இதனை‌ச் செ‌ய்‌‌கி‌ன்றன‌ர். கட‌ந்த கால‌த்‌தி‌ல் நா‌ன் கூ‌றியதை தயவு செ‌ய்து... தய‌வு செ‌ய்து... மற‌ந்து‌விடு‌ங்க‌ள். எ‌ன்னுடைய பட‌த்தை ‌திரை‌யிட என‌க்கு அனும‌தியு‌ங்க‌ள். நா‌ன் க‌‌ன்னட‌ர்களு‌க்கு‌ம் உத‌வி செ‌ய்ய தயாராக இரு‌க்‌கிறே‌ன். "'குசேல‌ன்' பட‌த்தைக் க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌ வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தா‌ர்.

இதனா‌ல் க‌ர்நாடகா‌வி‌ல் ர‌‌சி‌னிகா‌ந்‌தி‌ன் 'குசேல‌ன்' பட‌ம் வெ‌ளியாவ‌தி‌ல் இரு‌ந்த ‌சி‌க்கலு‌க்கு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. க‌ர்நாடகா‌வி‌ல் ர‌சி‌னி‌யி‌ன் 'குசேல‌ன்' பட‌ம் 15 திரையர‌ங்குக‌ளி‌ல் ‌திரை‌யிட‌ப்பட உ‌ள்ளது. இ‌ப்பட‌த்‌தி‌ன் ஒரு வார‌த்து‌க்கான நுழைவுச்சீட்டுகள் அனை‌த்து‌ம் ஏ‌ற்கனவே ‌வி‌ற்று‌த் ‌தீ‌ர்‌ந்து ‌வி‌ட்டன எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌‌ட‌த்த‌க்கது.

*இது மானங்கெட்ட தமிழன் கதை:-

இரசினிகாந்தின் இந்த இரட்டை வேடத்தனத்தைக் கண்டித்து நடிகர் சரத்குமார், சத்தியராசு, விசய.டி.இராசேந்தர் போன்றோர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். அதே வேளையில், திரைப்படத்துறை சார்ந்த இயக்குநர் கே.பாலசந்தர், பி.வாசு முதலான நயவஞ்சக நரிக்கூட்டத்தினர் சிலர் கன்னடக்காரரான இரசினிக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கி பேசியுள்ளனர். இதைவிட மகா கொடுமை, "என் இனியத் தமிழ் மக்களே" என முழங்கும் இயக்குநர் பாரதிராசா கூட தமிழன் காலை வரிவிடும் வகையில் இரசினிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழ்மானமும் தமிழ் உணர்ச்சியும் மழுங்கிப்போன தமிழ்நாட்டு மக்கள் கூட்டங்கூட்டமாகச் சென்று 'குசேலனைப்' பார்க்கின்றனர். என்ன வெட்கக் கேடு? என்ன ஒரு கேவலம்? என்ன ஒரு கேனத்தனம்?

கன்னட இன, மொழி, மாநிலத்தைச் சேர்ந்த நடிகன் இரசினி தன்னுடைய சொந்த நலனுக்காக தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் முன்னிலையில் நயவஞ்சகமாக நாடகமாடுகிறார். இதுகூட (புரிந்தும்) புரியாத தமிழ்நாட்டு மழுங்காண்டித் தமிழன் அவரைப் பெரிய மனிதராக்கிவிட்டு, அவருடைய படங்களுக்குப் பாலபிசேகம் செய்து, கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். எவன் எவனோ தமிழ்நாட்டுத் தமிழன் முதுகில் ஏறி மிதிக்கிறான். அதற்கெல்லாம் சூடு சுரணையின்றி தமிழ்நாட்டுத் தமிழனும் ஏமாந்துபோய் குனிந்து கொடுக்கிறான்.

என்ன கொடுமை ஐயா இது!!! கன்னடத்தானுக்கு இருக்கும் மொழிப்பற்றும் இனப்பற்றும் தமிழனுக்கு இல்லையா? கன்னடத்தானைப் பார்த்தும்கூட தமிழன் திருந்தவே மாட்டானா? எவன் எவனோ வந்து ஏறி மிதித்தாலும் ஏமாற்றிப் பிழைத்தாலும் தமிழனுக்குப் புத்தி வராதா?

@ஆய்தன்:-
தமிழ்நாட்டுத் தமிழனுக்குச் சூடு சுரணை இருந்தால்..
உலகத் தமிழனுக்கு மானம் ஈனம் இருந்தால்..
மலேசியத் தமிழனுக்கு உணர்ச்சியும் உறுதியும் இருந்தால்..
'குசேலன்' படத்தைப் புறக்கணிக்க வேண்டும்!
'குசேலன்' படத்தை இரசினியின் கடைசி தமிழ்ப்படமாக ஆக்கவேண்டும்!
'சூப்பர் சுட்டாரை' மீண்டும் அவர் நாட்டுக்கே விரட்டியடிக்க வேண்டும்!

5 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

ஒரு நடிகனை கடவுள், அவதாரம், என்று தலையில் தூக்கி வைத்து ஆடிய ஒரே இனம் தமிழினம்தானே.. இச்சம்பவத்திற்குப் பிறகும், எந்த ஒரு நடிகனையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வெறித்தனம் தொடர்ந்தால், அவர்களைவிட மடையர்கள் யாரும் இருக்க முடியாது..

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

தவளை தன் வாயல் கெடும்...

பெயரில்லா சொன்னது…

//எவன் எவனோ தமிழ்நாட்டுத் தமிழன் முதுகில் ஏறி மிதிக்கிறான். அதற்கெல்லாம் சூடு சுரணையின்றி தமிழ்நாட்டுத் தமிழனும் ஏமாந்துபோய் குனிந்து கொடுக்கிறான்.//


நிதர்சனமான உண்மை. ஆனால் திருந்த வேண்டுமே இந்தத் தமிழர்கள்!

பெயரில்லா சொன்னது…

Nanna rajniku ithuvum venum, innamum venum. Tamil makkalai ematrum rajni mathiri annniya jathikaaranai tamil makkal viratti adikkum kaalam vanthuvitthathu. Valga tamil! Valarga tamil makkal otrumai.

பெயரில்லா சொன்னது…

MAANAM KETTA THAMILANE,
MUTHALIL OTTRUMAI ENDRAAL ENNA NU TERINJUKKO,
ATHE KETTIYA PURINJIKKO,
APPURAM PAARU ONNE ORUTHANUM VELLA MUDIYAATHU, INTHA ULAGATHILE.

UNNIDAM MIGA-MIGA KURAIVA IRUPATHU, INTHA "OTTRUMAI THAAN.
ATHU ILLATHAVAI, NEE MANNU THAAN.