வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 10 டிசம்பர், 2008

தமிழ் நாளிதழ்களின் கோமாளிக் கூத்து


மலேசியத்தில் தமிழ் – தமிழர் தொடர்பான செய்திகளை அல்லது சிக்கல்களை முன்படுத்தி பல்வேறு வலைப்பதிவுகளில் வரும் தகவல்களைத் தமிழுயிரில் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்பட்டது. அவ்வெண்ணத்தின் எதிரொளிப்புதான் 'அக்கம் பக்கம்' என்ற இந்தப் பகுதி. தமிழியம் தொடர்பான சிந்தனைக்குரிய பதிவுகள் இங்கே 'தொடுப்பாக' வழங்கப்படும். 'அக்கம் பக்கம்' இனி தொடராக அவ்வப்போது தமிழுயிரில் வரும். @(ஆய்தன்)

நூறுக்கு தொண்ணுற்று ஒன்பது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

குறிப்பாக தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மேடை, வானொலி, தொலைக்காட்சியில் பேசும் தமிழ் மொழி அறிஞர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

இன்று தமிழ் நாளிதல்களில் கண்டன அறிக்கை விடும் பல தலைவர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

மலேசியாவில் இந்திய ஆய்வியல் துறை உள்ள ஒரே பல்கலைகழகம் என்று பீத்தி கொள்ளும் பல்கலைகழக விரிவுரையளர்கள், பேராசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள்.

தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கடமை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இளைஞர் மன்ற தலைவர்கள், இந்து சங்க தலைவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள்.

தமிழ் பள்ளிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போது நம் நாட்டில் ஏன் தமிழ் பள்ளிகள் வேண்டும்???? (மேலும் படிக்க)

கருத்துகள் இல்லை: