வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 16 மார்ச், 2008

வண்டவாளம்..! (1)


என் பெயர்:- சி.நாகப்பான்

எண்கணிதப்படி மாற்றிக்கொண்ட பெயர்:- சி.நக்பா

முழுநேரத் தொழில்:-
தமிழர்களின் நல்ல பெயர்களை எண்கணிதப்படி கோளாறாக்குவது

பகுதிநேரத் தொழில்:-
வானவில் தொலைக்காட்சியில் எண்கணிதம் பற்றி புழுகுவது

எண்கணிதத்தின் சிறப்பு:- பணம் பண்ணும் திருட்டுவழி

எனக்கு ஏன் இந்தத் தொழில்:-
உழைத்துச் சம்பாதிக்க சோம்பலாக இருப்பதால்

எண்கணிதம் எப்போது தோன்றியது:- தமிழன் அறிவுகெட்டுப் போன பிறகு.


என் வாடிக்கையாளர்:-
படிக்காத மக்குகளும் சில படித்த மடையர்களும்

என்னுடைய மூலதனம்:- மக்களின் முட்டாள்தனம்

நான் சூட்டிய சில அருமையான பெயர்கள்:-
ருப்பிவிஷி, ப்ரியவாஹினி, குவாமுஷன், ரிஷிகுஷி, பூக்பஜ்ஜன், குஷால் ராஜ், அஹோவஜன் இப்படி பல உள்ளன.

மறக்க முடியாதது சம்பவம்:-
Magenthiran என்பதை Mahkkheennddraan மாற்றிக் கொடுத்தேன். அவர் பெரிய பெரிய கோடிசுவரனாக வருவதற்குப் பதிலாக கேடியாக மாறிவிட்டார். பாவம்!

பிடித்தப் பாடல் வரி:- எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு இராமையா..!


  • ஆய்தன்:- தமிழா.. எத்தனைக் காலம்தான் ஏமாறுவாய் எண் கணிதத்திலே!

கருத்துகள் இல்லை: