வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 21 பிப்ரவரி, 2009

அண்மைச் செய்தி:கொழும்புவில் வான்புலிகள் தாக்குதல்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன.

புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகப் பகுதியிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை விசியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 28 போ் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


@விரிவான செய்தி: புதினம் / பதிவு / என்வழி

2 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

புலிகளின் ஒரு விமானத்தை சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.. :(

http://www.youtube.com/watch?v=nJpU_AQw-jU

HS சொன்னது…

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்