வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 12 பிப்ரவரி, 2009

நாளையே விடுதலை!

  • எழுக தமிழனே! இனநலம் கருதுக!
    கொழுந்துவிட் டெரியும்உன் குலைக்கனல் பெருக்குக!
    உன்றனை விடுதலைக் கொப்புவித் திடுக!
    பின்வரும் தமிழருன் பெற்றியைப் புகழ்வர்!
    வடக்குக் கதவினை இறுக்கிப் பூட்டுக!
    இடக்குசெய் ஆரிய இனக்கொழுப் புருக்குக!
    இழிவுக்குத் தீ வை! ஏற்றப் படியமை!
    அழிவுசெய் அடிமைத் தளைகளை உடைத்தெறி!
    உணர்வுகொள்! உறுதிகொள்! உயிரைப் பணயம் வை!
    தினவுத் தோள்களால் வெற்றியைத் திருப்பு!
    நாளையே விடுதலை நண்ண.
    காளையே! களிற்றின் கன்றே! கனல்கவே!

    (பாவலரேறு பெருஞ்சித்திரனார்-1969)

@ஆய்தன்:-
எழுக தமிழனே..! ஈழநலம் கருதுக..!
நாளையே விடுதலை விடியும்.!

கருத்துகள் இல்லை: