வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

ஐ.நா.வில் முதல்முறையாகத் தமிழீழம் மலருகிறது

இன்று வெள்ளிக்கிழமை (27.02.2009) ஜ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் கூடி இலங்கை நிலைகுறித்து ஆராயவுள்ளன. இந்த முடிவானது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையை அடுத்து அவசரமாக நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக இன்ர சிற்றி பிரசு(ICP) அறிவித்துள்ளது.

இன்று காலை இடம்பெறவிருக்கும் இக்கூட்டத்தைப்பற்றி இலங்கை அரசாங்கத்துக்கு ஜ.நா பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது. வீட்டோ அதிகாரம் கொண்ட 5 அங்கத்துவ நாடுகளும், இம்முறை தமது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விவாதத்திற்கு இடையூறு விளைவிக்காது என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள விவாதமானது இலங்கை இனப்பிரச்சனையின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

பிரித்தானிய மற்றும் ஜரோப்பிய வாழ் தமிழர்களின் உச்சக்கட்ட போராட்டத்தின் பலனாகவே, ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கையின் நிலை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

@ஆய்தன்:-
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் - ஓயாத
அலைமேல் அலையடித்தால் இமயமும் இடியும்..!


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

emmakkalai kappom..

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

எப்படியோ எம் தமிழர்களுக்கு விடிவு வந்தால் சரி

:(((

ttpian சொன்னது…

while forming Tamileelamwe will provide:
Channel contract to Kanimozhi attha!
1500 Acres of Grape garden(Fully airconditioned) to SISTERS!