வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

ஈழத்திற்கு வாக்களிக்க விரல்கள் நீளட்டும்..


தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற கோர யுத்தத்தினால் இறந்து மடிகின்ற நமது இரத்த உறவுகளைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துக் கணிப்பினைக் கனடாவைச் சேர்ந்த இராணுவ ஊடகம் ஒன்று மேற்கொள்கின்றது.

நமது தொப்புள்கொடி உறவுகளின், நமது இரத்த உறவுகளின் உயிர்களினைப் பாதுகாக்க நீங்கள் விரும்பின் உடனடியாக விரைந்து செயற்படுங்கள்.

உலகங்கெங்கும் பரந்து வாழுகின்ற உறவுகளே!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக 0014162604005 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு எமது உறவுகளைப் பாதுகாக்க விரும்பின் அறிவுறுத்தல் (Option) ஒன்றினை ( 1) அழுத்தவும்.

காலம் தாமதிக்காமல் உடனே விரைந்து செயற்படவும். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானலும் வாக்களிக்காலம். ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.

இந்த விடயத்தை உடனடியாக உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்! நேற்று இடம்பெற்ற எறிகணை மற்றும் பல் குழல் உந்துகணைத் தாக்குதலில் (12) பன்னிரண்டு சிறுவர்கள் உட்பட (32) முப்பத்திரண்டு பேர் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அழுத்துங்கள் உங்கள் தொலைபேசிகளை! பதியுங்கள் உங்கள் வாக்குகளை! திறவுங்கள் உலகின் விழிகளை!

Hi Every One! please vote for ceasefire in SriLanka. Please dial 0014162604005 and press one. This vote been canadian army media. Please act soon... And pass the message to every one you know. Please...Please vote now and safe our people. Evan last night 32 been killed including 12 kids on ariel bombing.

@ஆய்தன்:-

மண்மீட்புச் சமர்களத்தில்
உடன்பிறப்புகளைக் காப்பாற்ற
உங்கள் உயிர்கள் வேண்டாம்...
உடனே நீளட்டும்....
உங்கள் விரல்களாவது!!!!!!
  • நன்றி:-தமிழ் மதுரம்

பி.கு:- இந்த வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக அறியப்படுகிறது -(ஆய்தன் 2.2.2009 மாலை மணி 5.30)


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இதயம் கிழிந்து
இரத்தம் உறைகின்றது..?!
ஈழத்தில்
என் தமிழ்மக்கள்
படும் துயர்கண்டு..!!

தினம்..தினம்..
என் தேசத்தில்
குண்டுமழை...!
தினம்..தினம்..
என் தமிழ்மக்கள்
மண்ணறையில்
பதுங்கி
கண்ணீர்ப் போராட்டம்..!?

ஈரமற்ற..இதயமற்ற..
தேசத்து மண்ணில்
வெடித்துச்
சிதறுவது..
என் தமிழ் இரத்தம்தான்..!!
சிதறி தெறித்து
விழும்
ஒவ்வொரு
இரத்தத் துளியும்
இப்பூமியில்
மீண்டும் உயிர்த்தெழும்...!!

ஈழம் எரிகிறது...
ஈவிரக்கமற்ற உலகம்
பார்த்து
இரசிக்கிறது...!
உலகின்
எங்கோ ஒரு மூலையில்
போரில்
மடிந்துபோகும்..
உயிர்களுக்காக
உலகமே
கண்டனம் தெரிவிக்கிறது..
கண்ணீர் விடுகின்றது...!!
தவறில்லை..
அவர்களும்
மனிதர்கள்தானே...!!

ஆனால்...,
என் தமிழீழத்தில்
கேட்கப்படும்
கதறல்கள்...
அழுகைகள்...
ஓலங்கள்...
பாலாய்ப்போன
இவ்வுலகத்தின்
காதில்
ஏனோ விழுவதில்லை...!??

மனித நேயமற்ற
என் உலகமே....
ஈழத்தில்
உள்ளவனும்
மனிதன்தானே...!!
பிடுங்கி எறியும்
மயிரல்லவே...!!?

"தமிழீழம் வாழட்டும்.."
தமிழர் வெற்றி கொட்டட்டும்...!!"