வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 12 டிசம்பர், 2008

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு

இணையத் தமிழ் வாசகர்களுக்கோர் அறிவிப்பு!

எதிர்வரும் திசம்பர் 14-ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை), முதன்முறையாக மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு தலைநகரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.


இச்சந்திப்பின் விவரங்கள் பின்வருமாறு:-

நாள் : 14 திசம்பர் 2008(ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00
இடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல் (செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)
தொடர்புக்கு :விக்னேஸ்வரன் - 012 5578 257 / மூர்த்தி - 017 3581 555


பி.கு:- புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்களுக்கு அங்கு பயிற்சி வழங்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர்களும் விருப்பமுள்ளவர்களும் நண்பர்களோடு வந்து கலந்து கொண்டு பயன்பெறவும்.

@ஆய்தன்:-

முதன் முறையாக ஏற்பாடாகி இருக்கும் இந்தச் சந்திப்பு வெற்றிபெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல இறைவனின் பேரருளையும் இறைஞ்சுகிறேன்.

ஆழமான கருத்துகள் பரிமாற்றம் ஆகட்டும்..!
ஆக்கமான ஏடல்கள் செயல்வடிவம் காணட்டும்..!

கலந்துகொள்ள முடியாத இக்காட்டான நிலையில் இருக்கிறேன். ஏற்பாட்டாளர்கள் தயவுகூர்ந்து பொறுத்தருள்க!!

கருத்துகள் இல்லை: