வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 6 டிசம்பர், 2008

சீனரைப் போல் தமிழன் சிந்தித்தால்...

மலேசியம் பல்லினம் வாழும் நாடு. அதில் மலாயர், சீனர், தமிழர்(இந்தியர்) மிகப்பெரிய இனங்களாவர். ஒவ்வொரு இனத்தாருக்கும் இந்த நாட்டில் தனிப்பட்ட அரசுரிமைகள் இருக்கின்றன.

அந்த அரசு உரிமைகளை முறையாகப் பெற்றுகொள்ள மலாய், சீன இனங்களைச் சார்ந்தவர்கள் மிகக் கவனமாகவும் – விழிப்பாகவும் – துணிவாகவும் – தொலைநோக்காகவும் இருந்து செயல்படுகின்றனர்.

மலாயரும், சீனரும் அவர்களின் தாய்மொழியை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் இனத்தை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் பள்ளிகளை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் எந்தவொரு உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

ஆனால், நமது தமிழர்கள் மட்டும்
தாய்மொழியாகட்டும்
தமிழ் இனமாகட்டும்
கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளாகட்டும்
தமிழ்ப்பள்ளிகளாகட்டும்
தமிழ்க்கல்வியாகட்டும்
வேறு எந்த உரிமைகளாகட்டும்

இப்படி எதையுமே தற்காப்பது இல்லை! பேணுவது இல்லை!
இவை எதைப்பற்றியும் ஆழமாகவும் தொலைநோக்கோடும் சிந்திப்பதே இல்லை!
இவற்றின் தனித்தன்மைகளைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணுவதே இல்லை!

எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்போம்:-

1)அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியிலும் கற்பிக்க மலாயரும் சீனரும் முடிவெடுத்து முனைப்புக் காட்டும் வேளையில் தமிழன் மட்டும் தாய்மொழிக் கல்வியைத் தட்டிக்கழிக்கிறான்.

2)மலாயரும், சீனரும் தங்களின் மொழிவழிப் பள்ளிகளுக்கே முதலிடம் கொடுக்கிறான். ஆனால், தமிழன் மட்டும் தமிழ்ப்பள்ளியைத் தட்டிக்கழித்து தேசியப்பள்ளியையும் சீனப்பள்ளியையும் நாடி ஓடுகிறான்.

3)மலாயரும் சீனரும் தங்களின் மரபுவழி கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பாடாற்றும் வேளையில், தமிழன் மட்டும் தன் சொந்தக் கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றாமல் இந்தியக் கலை, பண்பாட்டு, இலக்கியப் பணிகளில் ஈடுபாடு காட்டுகிறான்.

4)மலாயரும் சீனரும் தங்களது பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்திருப்பதற்கு மிகத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்படுகின்றனர். ஆனால், தமிழன் மட்டும் தன்னுடைய சொந்தத் தமிழ்ப்பள்ளியை இணைக்கலாமா? வாவாசான் பள்ளியாக மாற்றலாமா? அல்லது மூடியே விடலாமா? என்று சிந்திக்கிறான்.

5)மலாயரும் சீனரும் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகள்வழி தங்கள் தாய்மொழிக் கல்வியைப் பற்றி ஆழமான ஆய்வுகளை நடத்தி முறையாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுசொல்கின்றனர்; ஏற்ற தீர்வுகளையும் காண்கின்றனர். தமிழக்கோ அப்படி எந்த ஒரு அமைப்பும் இல்லை. அப்படியே எதாவது தமிழ் அமைப்பு ஆய்வு நடத்தி அறிவிப்பு செய்தாலோ மொழிவெறி - இனவெறி எனத் தமிழனே குற்றம் சாற்றி காட்டிக்கொடுப்பான்.

இப்படியாக,
தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி இந்த இழிந்த குணம்?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி முட்டாள்தனம்?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தன்னம்பிக்கையின்மை?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தொலைநோகின்மை?

இந்த நாட்டில் – இனிவரும் காலத்தில் நமது தமிழ் மக்கள் நலமாகவும் நன்றாகவும் வாழ வேண்டுமானால், தமிழர்கள் சீனர்களைப் போல சிந்திக்க முற்பட வேண்டும்.

ஏனென்றால். சீனர்களும் தமிழர்களும் பூமிபுத்திராக்கள் அல்லர்; சீனர்களும் தமிழர்களும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற குடிமக்கள்.
அதனால், தமிழர்கள் பூமிபுத்திராக்களைப் போல சிந்திப்பதைவிட சீனர்களைப் போல சிந்திப்பதே நல்லது - நலமானது - பாதுகாப்பானது.

ஆகவே, சீனர்கள் தங்கள் குடியுரிமையையும் - அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள உரிமைகளையும் தற்காத்துக் கொள்ள எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள் என்று பார்த்தாவது தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!

குறிப்பாக, பின்வரும் உரிமைகளைப் பாதுகாக்க சீனர்கள் ஏன் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் – ஒன்றுபட்டு குரல் எழுப்புகிறார்கள் - உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள் என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!

1)சீனப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும். (தமிழ்ப்பள்ளி நிலைத்திருக்க வேண்டும் என்ற அக்கறை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை)

2)மூடப்படும் சீனப்பள்ளிகளின் உரிமத்தைப்(லைசன்சு) பயன்படுத்தி வேரொரு இடத்தில் புதிய பள்ளியைத் திறக்க வேண்டும். (இதுவரை மூடப்பட்ட எந்த ஒரு தமிழ்ப்பள்ளி உரிமத்தையும் பயன்படுத்தி புதியத் தமிழ்ப்பள்ளி கட்டப்படவில்லை)

3)சீனப்பள்ளிகள் பகுதி உதவி பெறும் (பந்துவான் மோடால்) பள்ளிகளாகவே இருந்துவிட வேண்டும். (தமிழ்ப்பள்ளிகள் அரசுப்பள்ளிகளாக மாறவேண்டும் என்று தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்)

4)தொலைநோக்குப் பள்ளியைச் (வாவாசான் பள்ளி) சீனர்கள் வரவேற்கவில்லை. (தமிழ்ப்பள்ளிகள் தொலைநோக்குப் பள்ளிகளாக இணைக்கப்பட வேண்டும் என தமிழர்கள் ஆசைப்படுகிறார்கள்)

5)அறிவியல் – கணிதப் பாடங்களை ஆங்கிலம் சீனம் ஆகிய இருமொழிகளில் கற்பிக்கை சீனர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டனர். (தமிழர்கள் இன்னும் கூட்டம் போட்டுச் சிந்தியோ சிந்தி என்று மூளையைக் கசக்கிச் சிந்திக்கிறார்கள்)


6)சீனர்களின் மளிகைக் கடை தொடங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் சீனமொழிக்கு முதலிடம் தருகின்றனர். (தமிழர்கள் மலாயையும் ஆங்கிலத்தையும் மட்டுமே நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

7)எவ்வளவு வசதி வந்தாலும் எந்த ஒரு சீனரும் தன்னுடைய தாய்மொழியையும் பள்ளியையும் மட்டும் விட்டுக்கொடுப்பதே இல்லை. (தமிழனுக்குக் கொஞ்சம் காசுபணம் சேர்ந்துவிட்டால் அவன் முதலில் ஒதுக்கித் தள்ளுவது தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் தான்)

8)ஒரு துண்டு அறிக்கை எழுதுவதாக இருந்தாலும் சீனர் தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். (தமிழன் ஒரு மாநாடே நடத்தினாலும் மேடையில் ஒரு தமிழ் எழுத்தை எழுத மாட்டான்)

இப்படி இன்னும் பற்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழனிடன் மண்டிக்கிடக்கும் இத்தனைக் கோளாறுகளுக்கும் குளறுபடிகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் என்ன?

இந்த வினாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பைத் தமிழுயிர் அன்பர்களிடம் விடுகின்றேன். தமிழுயிர் அன்பர்களே.. தவறாமல் மறுமொழி கூறுங்கள்.

@ஆய்தன்:-
தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு

3 கருத்துகள்:

K.Sehgar சொன்னது…

உங்கள் மன ஆதங்கம் uங்கள் எழுத்துக்களில் தென்படுகிறது.
குறைகளை அறிந்தோம்.
இதை களைய நம் பங்கு என்ன.......
சமுதாயம் மாற வேண்டும் என்றால் நாமும் மாற வேண்டும்.
முதலில் நாம் மாறுவோம்.நம் குடும்ப உறுப்பினர்களை மாற்றுவோம்.
நம்மை பார்த்து நான்கு பேர் மாறுவர்.
பேசுவதை குறைப்போம்.
செயலில் காட்டுவோம்.
நன்றி.
www.tamilkavasam.blogspot.com

பெயரில்லா சொன்னது…

ningal kuriyatu atenaiyum unmei..tamilan mattum tan tamilanai munnera vidamal tadankala irukiran..tamia elluntiru vilitiru..valga india samutayam

maanamulla tamilachi சொன்னது…

malaysiavil mattum illai tamil naatilum ithe kathitaan.tamil pesa teriyaatha,tamil palliyai maranthavan ellam tamilam tan taayai marantavan.tamil ina patru,moli patru illaatha tamil naikalai suddu kolluvom