வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 20 மே, 2008

வரம்பு மீறும் விரிவுரை முண்டம்!

  • >>>தமிழுயிருக்கு வந்த மின்னஞ்சல்...
தமிழுயிர் ஐயா ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.

நான் பகாங்கு மாநிலம் குவாலா லீப்பிசில் உள்ள ஆசிரியர் பயிற்றகத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். இந்தப் பயிற்றகத்தில் பணியாற்றும் ஒரு தமிழ் விரிவுரையாளர் தமிழை இழிவாக பேசுகிறார். தமிழ் மொழி எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்பது போல பேசுகிறார். அதுமட்டுமல்லாமல், தூயதமிழ், நல்லதமிழ், தனித்தமிழ் என்று பேசுவது தேவையில்லாதது என்கிறார். மலாய்மொழி போல வேற்றுமொழி சொற்களை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ் சிறப்பாக இருக்கும் என்கிறார். ‘சுழியம்’ என்பதைவிட பூஜியம் என்பதுதான் நன்றாக புரிகிறது. எனவே, பூஜியம் என்றுதான் சொல்ல வேண்டும். சுழியம் என்பது யாருக்கும் புரியவில்லை என்கிறார்.

இத்தனையும் போதாது என்று, தமிழுக்கு சேவை செய்து தமிழை நன்றாக வளர்த்துவரும் உங்கள் குரல் என்ற மாத இதழை வாங்கவே கூடாது என்று எங்களைத் தடுக்கிறார். உங்கள் குரல் மிகவும் அருமையான ஒரு தமிழ் மாத இதழ். அந்த இதழைப் படித்துதான் நான் SPM மற்றும் STPM போன்ற தேர்வுகளில் தமிழ் மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற்றேன். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான இதழைப்பற்றி வரம்பு மீறி இழிவாகப் பேசிகிறார். அதனுடைய தமிழ் கரடுமுரடானது என்றும், அன்றாட பழக்கத்திற்கு உதவாது என்றும் கூறுகிறார். அவரை எதிர்த்து பேச எங்களுக்குத் தைரியம் இல்லை. அதனால்தான் உங்களுக்கு இந்த மின்னஞ்சல் எழுதுகிறேன்.

அவருக்கு நல்ல பாடம் நீங்கள் தான் புகட்ட வேண்டும் ஐயா?

நன்றி வணக்கம்.
ஔவை.
குவாலா லீப்பிசு.

@ஆய்தன்:-
அன்புள்ள ஔவை, எமது தமிழ்ப்பாட்டி ஔவை அன்று தமிழை வளர்த்தெடுத்தாள்; இன்று அந்த ஔவையின் பெயரில் தாங்கள் தமிழைக் காத்து நிற்கிறீர்கள். முதலில், தங்களின் தமிழ் உள்ளத்தை வணங்கி மகிழ்கிறேன்.

தங்கள் மின்மடலில் விரிவுரையாளர் ஒருவர் மேற்கொண்டுவரும் தமிழ் எதிர்ப்பு வேலைகளைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளீர்கள். இப்படித்தான் நம் நாட்டில் மூளைக்கெட்ட – தமிழ்ச் சுரணைகெட்ட விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஆசிரியர்களும் அதிகம் பேர் இருக்கின்றனர்.

இவர்கள் என்னதான் தமிழ் படித்தார்களோ தெரியவில்லை? தமிழைப் பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை! இந்த அறிவுகெட்டவர்கள் ஏன்தான் தமிழ் கற்பிக்கிறார்களோ, அதுவும் தெரியவில்லை!

உங்கள் ஆசிரியர் பயிற்றகத்தில் உள்ள அந்த விரிவுரை முண்டத்திற்கும், அந்த முண்டத்தைப் போன்று இன்னும் நாட்டில் தமிழ் கற்பிக்கும் தமிழ்ச் சுரணைகெட்ட முண்டங்களுக்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் பொறுப்பைத் தமிழுயிர் அன்பர்களிடமே விடுகின்றேன். எனவே, தமிழுயிர் அன்பர்களே கண்டிப்பாகக் கண்டியுங்கள்!!!

பெற்றெடுத்த குழந்தையைப் பேணி வளர்த்து கல்வி, ஒழுக்கம், பண்பாடுமிக்க ஒரு மாந்தனாக வளர்த்தெடுக்கும் கடமையை நிறைவாகச் செய்யும் பொறுப்புள்ள ஒரு தாய்க்கு நிகராக, மொழிக்கு அரும்பணி செய்யும் ‘உங்கள் குரல்’ இதழைப் பழிப்பது என்பதும் பெற்ற தாயின் அடிவயிற்றில் எட்டி உதைப்பது என்பதும் ஒன்றே!!! பெற்ற மடியை எட்டி உதைப்பவன் உருப்படவே மாட்டான்!!!

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

மீண்டும்-மீண்டும் தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தமிழ் வாத்திகளே தமிழ்மீது கைவைப்பதை நினைத்து உள்ளம் குமுறுகிறது. தமிழ் இன்னும் வளர்ச்சிப்பெறவில்லை என்றால் இவன் எதற்கு தமிழில் பணியாற்றுகிறான்.
இவன் என்ன மானங்கெட்டவனா ?

தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலக்கின்ற இவர்களைப் போன்றோரின் முகத்திரைக் கிழித்தெறியப் பட வேண்டும் .

அன்புடன்
குமாரன் கோல லிப்பீசு

பெயரில்லா சொன்னது…

தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டு தமிழுக்கே ஆப்பு அடிக்க நினைக்கும் இவர்களைப் போன்ற கயவர்களை என்ன சொல்லித் திருத்துவது.

இவனா தமிழன் இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது.

நாய் புணர்ந்தது தாயை
தாய் புணர்ந்தது பேயை
தப்பிப் பிறந்தது பன்றி
தமிழன் நிறத்தொடு ஒன்றி.

இவர்களைப் போன்ற தமிழ்க்கொலைப் புரியும் விரிவுரையாளர்களும் தமிழாசிரியர்களும் உண்மையிலேயே தமிழ்ச்சிக்குப் பிறக்கவில்லை போலும். மாறாக தமிழன் நிறத்தொடு ஒன்றி இருப்பவர்கள்

உண்மைத் தமிழ்ப்பணியில்
தமிழ்க்குமரன்
சொகூர் மாநிலம்

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

தமிழுயிருக்கு வந்திருக்கும் மின்மடலைக் கண்டேன். மிகவும் வருந்துகிறேன். நல்லதமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் குரல் மாதிகையை வாங்க வேண்டாம் எனப் பரப்புரை செய்யும் அந்த விரிவுரையாளரை மானமுள்ள மலேசியத் தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

தமிழனே தமிழுக்கு உயிராம்- அந்த மானங்கெட்ட
தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம் என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. இவர்களைப் போன்ற தமிழ்ப்பகைவர்களை களையெடுத்தல் வேண்டும். தமிழைக் காக்க நினைந்த ஒளவைக்கு நன்றி.
வாழ்க மக்கள் சத்தி

தமிழே தமிழரின் முகவரி
தமிழான்மன்

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா.
தமிழை கெடுப்பதற்கென்றே பிறவி எடுத்து வந்திருக்கும் சில கல்வியாளர்களை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும். அந்த வரிசையில் முதலில், இந்த விரிவுரை முண்டத்தின் மண்டையைப் பிளக்க வேண்டும்.

தமிழை இழிவுபடுத்தியிருக்கும் அந்த விரிவுரை முண்டம் தமிழ் முண்டமா அல்லது இந்திய முண்டமா என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இந்திய முண்டம் என்றால் அதன் பிறவி புத்தி என்று விட்டுவிடலாம். ஆனால், தமிழ் முண்டமாக இருந்தால் அதனை முடமாகவும் ஆக்கிப் போட வேண்டும். தமிழ் என்றால் சில முண்டங்களுக்கு ஏன்தான் வாய் வயிறெல்லாம் எரிகிறதோ தெரியவில்லை?

அரிசி கலப்படம் இல்லாமல் இருந்தால் தான் நல்லது. அப்படி அரிசியில் மணல் கலந்துவிட்டால் என்னவாகும்? அந்த அரிசி எதற்கும் பயன்படாது. அதுபோலத்தான் தமிழில் அன்னிய மொழி சொற்களைக் கலப்பது. இது சில தமிழ்ப்படித்த முண்டங்களுக்குப் புரிவதில்லை. அப்படிப்பட்ட முண்டங்களுக்கு இப்படிப்பட்ட தண்டனை மிகவும் தேவைதான்.

அடுத்து, உங்கள் குரல் இதழைப் புறக்கணிக்கும் அந்த முண்டத்தை என்னவென்று சொல்லுவது. நாட்டில் தமிழை வளர்க்கும் நல்ல இதழாகிய உங்கள் குரலை புறக்கணிக்கும் அந்த முண்டம், தமிழைக் கெடுத்து நாசப்படுத்தும் மற்ற இதழ்களையும் இதேபோல் புறக்கணிக்க முடியுமா?

மாணவர்களையும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் நாள், வார, மாத இதழ்கள் பல பல நாட்டில் உலாவரும் வேளையில், நல்லதமிழை வளர்க்கும் உங்கள் குரலை மூடச்சொல்லும் அந்த விரிவுரை முண்டத்தின் மூளைகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது?

உங்கள் குரல் போன்ற ஒரு தரமிக்க தமிழ் இதழைத் தடுகின்ற இந்த முண்டம் என்னதான் தமிழ் படித்ததோ தெரியவில்லை. ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் அழிவு வேலை செய்துவரும் இந்த அழுக்கு மூட்டையை அடையாளம் காட்டிய செல்வி/திருமதி ஔவையின் துணிச்சலுக்கு என் பாராட்டுகள்.

தமிழ்ப்பணியில் உங்களூடன்,
இளஞ்சித்திரன் - வெள்ளி மாநிலம்


அடுத்து,

பெயரில்லா சொன்னது…

யாரய்யா அது..? மீண்டும் ஒரு தமிழ்த்துரோகியா? தமிழைப் போதிக்கும் விரிவுரையாளருக்குத் தமிழ் மேல் பகையா? நல்ல தமிழ் ஆசிரியர்களை உருவாக்க வேண்டிய சிற்பியே சிலையை சிதைக்கலாமா? இவர் குருவா? இல்லை குருடா? அல்லது கிறு கிறு கிறுக்கா?

நல்ல தமிழை வளர்க்க முடியாவிட்டால் வேலையை விட்டு ஓட வேண்டியது தானே இந்த முண்டம்!

-சித்தன் சிவாசி

பெயரில்லா சொன்னது…

அன்பு வணக்கம் பல!
தமிழுயிர் மீண்டும் இன்னொரு தமிழ்ப் புல்லுருவியின் முகத்திரையைக் கிழித்துள்ளது. தம்ழைத் துச்சமாக நினைக்கும் அந்த விரிவுரையாளர் பற்றிய தகவலை அளித்த ஔவை என்ற அம்மைக்கு என்னுடைய பாராட்டுகள். தமிழைக் காக்க துணிவுடன் புறப்பட்டுள்ள அந்த வீரமங்கை வாழ்க!

'உங்கள் குரல்' என்ற மாத இதழ் இந்த நாட்டில் தமிழைத் தமிழாக ஏந்திவரும் ஓர் அருமையான இதழ். அந்த இதழில் துளி அளவும் சினிமா இல்லை, கவர்ச்சிப் படங்கள் இல்லை, கொச்சையான சிறுகதைகள் இல்லை, இளைஞரை நாசமாக்கும் ஆபாசம் இல்லை!!

மாறாக, தமிழ் இலக்கணம், இலக்கியம் பற்றிய அரிய கட்டுரைகள், செய்திகள், அறிவுக்கு விருந்தாகும் வினாவிடை பகுதிகள் என உயர்தரமான படைப்புகளை தாங்கி மலரும் இதழ் 'உங்கள் குரல்'. மேலும், யூ.பி.எஸ்.ஆர்., பி.எம்.ஆர்., எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் ஆகிய தேர்வுகளுக்கான தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்கள் பற்றிய வழிகாட்டிகள் தொடர்ந்து வருகின்றன.

இப்படிப்பட்ட ஓர் அருமைமிகுந்த இதழை வாங்க வேண்டாம் என மாணவர்களைத் தடுகின்ற அந்த விரிவுரையாளர் உண்மையிலேயே 'முண்டம்' தான் என்றால் மிகையாகாது. நல்ல தமிழ் வளர்ச்சிகளை நயவஞ்சகமாக தடுக்கும் இந்த முண்டத்திற்கு நல்ல பாடத்தைக் கற்றுகொடுக்க வேண்டும்.

தமிழுக்கு எதிராக செயல்படும் நன்றிகெட்ட பேர்வழிகளை தமிழ்ப் பற்றாளர்கள் ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.

அன்புடன்,
தமிழ் மானமுள்ள தமிழ் ஆசிரியன்
இளையவேல் - சிரம்பான்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா. உயர்க் கல்விக் கழகங்களில் தமிழை கேவலமாக பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். பாடம் நடத்தும் விரிவுரையாளர்கள் இப்படி கேவலமாக பேசுவது வருத்தமாக உள்ளது. தமிழ் மொழிக்கே சொந்தமான புகழும் சிறப்புகளும் நிறைய உள்ளன. அதனை அவர்கள் கற்றுக்கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அதை விட்டு சொந்த தாய்மொழியை கேவலப்படுத்தும் சிலரை திருத்த வேண்டும்.

-->பட்டதாரி மங்கை

பெயரில்லா சொன்னது…

வாழ்க,

சோறு போடுமா தமிழ் என்றான் அன்று
சோறு போட்டும் சுரணை போதலை இன்று...

இவர்களைத் திட்ட கெட்டவார்த்தை இல்லை... திட்டினால் அந்த கெட்டவார்த்தைக்கே கேவலம்...

இது போன்ற தன்மானங்கெட்டதுகள் முண்டங்கள் அல்ல.. வெறும் தீனீ தெண்டங்கள்...

ஒரு புறம் வருத்தம் இருப்பினும்...

தமிழை;அதன் பெருமையை;அதன் தேவையை உணர்ந்தவரும் உணர்பவரும் அதிகரித்து வருவது நம்பிக்கை அளிக்கிறது..

இளந்தமிழா உன்னைக் காண
இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த
துன்பம் குறையுது...

வணக்கத்துடன்,
அன்புச்செல்வன்,
தலைநகரம்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா. என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நான் அனுப்பிய மின்னஞலை தமிழுயிரில் வெளியீடு செய்துள்ளீர்கள். அதற்காக என் நன்றிகள். தமிழுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றுதான் அந்த விரிவுரையாளரின் செய்தியை அனுப்பினேன். எனக்கு இப்படி ஒரு துனிச்சல் வருவதற்கு தமிழுயிர்தான் காரணம் என்றால் மிகையாகாது. தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றும் தமிழுயிரோடு நானும் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றிட விரும்புகிறேன். தங்களின் மின்னஞ்சலைப் படித்தேன். மிகவும் உற்சாகமும் தன்னம்பிக்கையும் பெற்றேன். தங்களை என் தமிழ் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு தங்கள் வழியைப் பின்பற்றுவேன். எந்தக் காலத்திலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் தமிழை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று உறிதி அளிக்கிறேன்.

மிக்க நன்றி ஐயா!

அன்புடன்,
ஔவை, குவாலா லீப்பிசு.

பெயரில்லா சொன்னது…

ஆசிரியர் பயிற்றகத்தில் நடக்கும் கொடுமையை தைரியமாக வெளிப்படுத்திய சகோதரி ஔவை வாழ்க! விரிவுரை வகுப்பில் நம்மைப் போன்ற மாணவரின் தமிழ் அறிவை குறைசொல்லி கேவலப்படுத்தும் சில விரிவுரையாளர்களுகு நல்ல சவுக்கடி கொடுத்தீர்கள். தமிழ் படிக்க வந்த எங்களிடம் அந்த தமிழையே கேவலப்படுத்து வகையில் பேசும் சில விரிவுரையாளர்களுக்கு நல்ல பாடம் புகட்டினீர்கள்.

அன்புள்ள,
தமயந்தி,
ஆசிரியர் பயிற்றகம்.

பெயரில்லா சொன்னது…

Evanda antha lecturer...? Naasama ponavan..!!!!

பெயரில்லா சொன்னது…

Žì¸õ. ¾Á¢ú ¸üÚ, ¾Á¢Æ¡ø Å¡úóÐ ¦¸¡ñÎ, ¾Á¢¨Æô ÀÆ¢ôÀÅý; ¦ÀüÚ ÅÇ÷ò¾ò ¾¡¨Â ¦¿È¢¦¸ð¼Åû ±ýÚ ÜÚžüÌî ºÁõ.
Vanakkam. Thamil katRu, thamizhaal vaazhntu koNdu, thamizhaip palippavan; peRRu vaLarththa thaayai NeRi keddavaL enRu kuuRuvathaRku samam.

kumar5225@hotmail.com சொன்னது…

'படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோயில்' என்பர். அப்படித்தான் இப்படிப்பட்ட மானம் கெட்ட மானிடர்கள் (தமிழன் என்ற கம்பளி போர்த்தியிருப்பவர்கள்)இவர்கள் இருப்பதைக் காட்டிலும் இறப்பது மேல்!

பற்றுடன்
உர்யிர்தமிழன், சா ஆலாம்.