வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 11 மே, 2008

**அன்னையர் நாள் நல்வாழ்த்துகள்**


'அம்மா' என குழந்தை அழைக்கும் தமிழ்கேட்டு
அகம் மகிழ்ந்திடும் அன்னையர்க்கும்...

'மம்மி' என அழைத்தால் பிணமென்று பொருள்கண்டு
மனம் பதைத்திடும் அன்னையர்க்கும்...

அழகுத் தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டி
அருந்தமிழ் போற்றும் அன்னையர்க்கும்...

தலைவாரி பூச்சூடி தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளையைத்
தமிழ்கற்க அனுப்பும் அன்னையர்க்கும்...

விருந்தினர் வருகையில் வணக்கம் சொல்லி
வரவேற்கும் சிறுவரின் அன்னையர்க்கும்...

தமிழ்க்குடும்பம் வாழும் தமிழ்வீட்டில் தமிழ்ப்பேசும்
தமிழ்க்குழந்தை ஈன்ற அன்னையர்க்கும்..

திருக்குறள், தேவாரத் திருவாசகத் திருப்பாடல்கள்
தித்திக்கும் தமிழ்ப்பாலரின் அன்னையர்க்கும்...

வாழையடி வாழையென வந்த தமிழ்ச்சான்றோர்
வரலாறு புகட்டும் அன்னையர்க்கும்...

தமிழனுக்குப் பிறந்த தமிழனடா நீயென
தமிழுணர்ச்சி ஊட்டும் அன்னையர்க்கும்...

தமிழனென்று சொல்லி தலைநிமிர்ந்து நில்லடா என
தன்னம்பிக்கை வளர்க்கும் அன்னையர்க்கும்...

தமிழுயிரின் தலைவணங்கிய வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..
அன்னையர் நாள் நல்வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை: