வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 15 ஜூலை, 2007

மின்னலுக்கு இரண்டு நாக்கு

மலேசிய வானொலி மின்னல் (எஃப்.எம்) பண்பலை சில காலங்களுக்கு முன் 'சுழியம்' என்ற நல்லதமிழ்ச் சொல்லைப் பெரும் பாடுபட்டு வேரறுத்ததை எமது தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார். தமிழன்னையின் அருள்பெற்ற இளம் அறிவிப்பாளர் பெருமக்கள் சிலர் முன்னின்று அறிமுகப்படுத்திய 'சுழியம்' என்ற சொல்லைப்பார்த்து மிரண்டுபோன மின்னலின் தலைமை பொறுப்பாளர்கள் சிலர் பெரிதும் முயன்று முயன்று அச்சொல் வானலையில் ஒளிபரப்பாவதை தடுத்து நிறுத்தினர். துடிப்புமிக்க இளம் அறிவிப்பாளர்கள் அதற்காக தண்டிக்கப்பட்டனர். இத்தனையும் நடந்த சுவடுகள் இன்னமுன் அழியாத நிலையில், இப்போது மின்னல் பஸ் என்று சொல்லாமல் 'பேருந்து' என்கிறது; லைசன்ஸ் என்று உளறாமல் 'உரிமம்' என்கிறது; 'குறுந்தகவல்' என்று கூறாமல் 'குறுஞ்செய்தி' என்கிறது; பேட்டி என்று புலம்பாமல் 'நேர்க்காணல்' என்கிறது. இதுவெல்லாம் 'சுழியம்' போன்ற நல்லதமிழ் சொற்கள் என்பது மின்னலுக்கு தெரியுமா? தெரியாதா? சுழியத்தை அழித்த சூழ்ச்சிக்காரர்கள் மேலே சொன்ன சொற்களுக்கு இசைவு அளித்தது எப்படி? மின்னல் ஒருபக்கம் தமிழை அழிக்கிறது; மறுபக்கம் வளர்க்கிறது. இவர்களால் எப்படி முடிகிறது இது? இன்னொன்றும் சொல்லலாம். மூளை கெட்ட மின்னல் உயர் அதிகாரிகளே உங்கள் வானொலியில் உலாவரும் 80 விழுக்காட்டு சொற்கள் நல்லதமிழே! ஒரே ஒரு சுழியத்தை அழிக்க வரிந்துகட்டிக்கொண்டு வீம்பு செய்த இராச சேகரன்களும் சாந்தாக்களும் எங்கே போனார்கள்? நீங்களே தெரிந்தோ தெரியாமலோ நல்லதமிழ்ச் சொற்களை உலறிவிட்டால் அது சரி! மற்றவர்கள் எடுத்துச்சொன்னால் அது (தமிழ்)வெறியா? இனியாவது திருந்துங்கள்! இறைவன் நல்லபுத்தி தருவானாக!
  • ஆய்தன் : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?

கருத்துகள் இல்லை: