வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மெர்டேகா...! -ஏழு முறை சொல்லுங்கோ..

வளமிகு மலேசியத்தின் குடிமக்கள் அனைவருக்கும்

52ஆம் ஆண்டு விடுதலை(சுதந்திர) நாள் நல்வாழ்த்துகள்.

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!


@ஆய்தன்:-
ஒரே நாடு
ஒரே எண்ணம்
ஒரே இலக்கு
ஒரே மலேசியா

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

துப்பாக்கி முனையில் தமிழர்கள் படுகொலை:- சனல் 4 காட்சி


தமிழர்களை அழவைத்த
அந்தக் கொலைக்காட்சி
இதுவும் போதாதா உலகத்துக்கு
எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி....


இறந்த உடல்களெல்லாம்
நிர்வாணமாய் கிடக்க
உயிருள்ள ஓர் உறவின்
உயிர் குடிக்கிறது துப்பாக்கி.....
அவர் உதிரம் நிலம் நனைக்க
அவன் சிரிப்போசை கேட்கிறது....
நாம் சிந்திய இரத்தத்தில்
அவன் சந்தோசம் மிதக்கிறது.....


யார் இவர்கள்....?
எமைக் காத்த தெய்வங்களா....
இல்லை..
ஈழத்து இளம் மயிலா...
அல்லது...
எம் ஊரு காளைகளா....
எம் மொட்டுக்களின் பெற்றோரா...?


புலியாக இருந்தாலும்
பொதுமகனாக இருந்தாலும்
அவன் இறந்தது உனக்காக.....
உன் தேச மீட்புக்காக.......

கண்ணீரும் வற்றி விட்டோம்
கலங்க நேரமில்லை...
புலம்பெயர் உறவுகளே
புலம்ப பொழுதுமில்லை....
புகலிடமே ஒன்று சேரு
உன் பொறுமை நீங்கி போராடு
நீ ஒன்றுசேரத் தாமதித்தால்
மறுபடியும் ஓடும் அங்கே
தமிழன் இரத்த ஆறு....!!

ஆக்கம்:-இளங்கவி (யாழ் இணையம்)


முக்கிய அறிவிப்பு:- இளகிய மனமுள்ளவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது. (கொடூரத்தைப் படிக்க / பார்க்க)


@ஆய்தன்:-

இரத்தம் உறைகிறது..
குலை நடுங்குகிறது..
இதயம் வெடிக்கிறது..
உயிரின் வேர்வரை துடிக்கிறது..
என் ஈழத்துத்
தொப்புள்கொடி உறவின்
உயிர்பலி..
மரணவலி..!!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

கதற வைக்கும் காட்சிகள்..!!

கப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன். (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
எங்கு சென்றினும் எங்களுக்கேன் இந்நிலை
எதிரிக்கும் வாய்த்திடலாமோ எங்கள் நிலை!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

தமிழனுக்கு உலக முகவரி கொடுத்தவன் ஈழத்தமிழன்

@ஆய்தன்:-

வைரமுத்துவும் ஒரு போதிமரம்தான் - அவ்வப்போது

வைரத்தைப் போலொரு செய்தி தருவதால்..!

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈனத்தமிழர்கள் காண வேண்டிய ஈழச்சிறுவன் பேச்சு



@ஆய்தன்:-
தமிழ் இனத்தை மதிக்கிறான் ஈழத்தமிழன்!
தமிழ் இனத்தை மிதிக்கிறான் ஈனத்தமிழன்!


வெள்ளி, 31 ஜூலை, 2009

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்:- இராணுவப் புலனாய்வுத் துறை


விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.


விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6வது மாடியை ராணுவத்தினர் சோதனை யிட்டுள்ளனர்.

எனினும், இராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.
இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர் என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாக இராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
@செய்தி: நக்கீரன்
@ஆய்தன்:-
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே - நம்
பொறுமையின் பொருள்மட்டும் விளங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள் - நாம்
அடிமையில்லை என்று முழங்கட்டுமே..!

வெள்ளி, 10 ஜூலை, 2009

ஈழம், நேற்று - இன்று - நாளை:- சீமான் நேர்க்காணல் காணொளி


பகுதி 1


பகுதி 2


பகுதி 3


ஆய்தன்:-
நிலம் வீழலாம்!-எங்கள்
நெஞ்சம் வீழாது!
களம் மாறலாம்-எங்கள்
உளம் மாறாது!
எல்லாம் முடிந்தது என்று
இறுமாந்திருக்காதே பகையே!
காலம் வரும்வரை பொறுத்திருப்போம்
கரும் புலிகளின் சாம்பலில் இருந்து
உயிர்தெழுவோம்!!!!!!!!!!!!