வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

துப்பாக்கி முனையில் தமிழர்கள் படுகொலை:- சனல் 4 காட்சி


தமிழர்களை அழவைத்த
அந்தக் கொலைக்காட்சி
இதுவும் போதாதா உலகத்துக்கு
எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி....


இறந்த உடல்களெல்லாம்
நிர்வாணமாய் கிடக்க
உயிருள்ள ஓர் உறவின்
உயிர் குடிக்கிறது துப்பாக்கி.....
அவர் உதிரம் நிலம் நனைக்க
அவன் சிரிப்போசை கேட்கிறது....
நாம் சிந்திய இரத்தத்தில்
அவன் சந்தோசம் மிதக்கிறது.....


யார் இவர்கள்....?
எமைக் காத்த தெய்வங்களா....
இல்லை..
ஈழத்து இளம் மயிலா...
அல்லது...
எம் ஊரு காளைகளா....
எம் மொட்டுக்களின் பெற்றோரா...?


புலியாக இருந்தாலும்
பொதுமகனாக இருந்தாலும்
அவன் இறந்தது உனக்காக.....
உன் தேச மீட்புக்காக.......

கண்ணீரும் வற்றி விட்டோம்
கலங்க நேரமில்லை...
புலம்பெயர் உறவுகளே
புலம்ப பொழுதுமில்லை....
புகலிடமே ஒன்று சேரு
உன் பொறுமை நீங்கி போராடு
நீ ஒன்றுசேரத் தாமதித்தால்
மறுபடியும் ஓடும் அங்கே
தமிழன் இரத்த ஆறு....!!

ஆக்கம்:-இளங்கவி (யாழ் இணையம்)


முக்கிய அறிவிப்பு:- இளகிய மனமுள்ளவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது. (கொடூரத்தைப் படிக்க / பார்க்க)


@ஆய்தன்:-

இரத்தம் உறைகிறது..
குலை நடுங்குகிறது..
இதயம் வெடிக்கிறது..
உயிரின் வேர்வரை துடிக்கிறது..
என் ஈழத்துத்
தொப்புள்கொடி உறவின்
உயிர்பலி..
மரணவலி..!!

கருத்துகள் இல்லை: