புதன், 23 செப்டம்பர், 2009
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
தமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்
தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்குத் கவிஞர் தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு; இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாகச் சொல்பவர் தாமரை.

ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார்.
சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்.
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் அமைதிப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார்.
குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாய்க்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார். (விரிவாக)
@நன்றி:தமிழன்பன் பக்கம்
@ஆய்தன்:-
நாம் தமிழர்
நம் மறை திருக்குறள்
உண்மையறி தமிழா
உணர்ந்துகொள் தமிழா
எழுதியோன்:
ஆதவன்
4
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
திங்கள், 7 செப்டம்பர், 2009
புதன், 2 செப்டம்பர், 2009
உலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உலகிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்திற்குச் சொந்தமானது.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி. (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
விதியே, விதியே, தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ? -பாரதி
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
மெர்டேகா...! -ஏழு முறை சொல்லுங்கோ..
வளமிகு மலேசியத்தின் குடிமக்கள் அனைவருக்கும்
52ஆம் ஆண்டு விடுதலை(சுதந்திர) நாள் நல்வாழ்த்துகள்.
மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!
மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!

@ஆய்தன்:-
ஒரே நாடு
ஒரே எண்ணம்
ஒரே இலக்கு
ஒரே மலேசியா
எழுதியோன்:
ஆதவன்
2
மறுமொழி(கள்)
வியாழன், 27 ஆகஸ்ட், 2009
துப்பாக்கி முனையில் தமிழர்கள் படுகொலை:- சனல் 4 காட்சி
தமிழர்களை அழவைத்த
அந்தக் கொலைக்காட்சி
இதுவும் போதாதா உலகத்துக்கு
எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி....
இறந்த உடல்களெல்லாம்
நிர்வாணமாய் கிடக்க
உயிருள்ள ஓர் உறவின்
உயிர் குடிக்கிறது துப்பாக்கி.....
அவர் உதிரம் நிலம் நனைக்க
அவன் சிரிப்போசை கேட்கிறது....
நாம் சிந்திய இரத்தத்தில்
அவன் சந்தோசம் மிதக்கிறது.....
யார் இவர்கள்....?
எமைக் காத்த தெய்வங்களா....
இல்லை..
ஈழத்து இளம் மயிலா...
அல்லது...
எம் ஊரு காளைகளா....
எம் மொட்டுக்களின் பெற்றோரா...?
புலியாக இருந்தாலும்
பொதுமகனாக இருந்தாலும்
அவன் இறந்தது உனக்காக.....
உன் தேச மீட்புக்காக.......
கண்ணீரும் வற்றி விட்டோம்
கலங்க நேரமில்லை...
புலம்பெயர் உறவுகளே
புலம்ப பொழுதுமில்லை....
புகலிடமே ஒன்று சேரு
உன் பொறுமை நீங்கி போராடு
நீ ஒன்றுசேரத் தாமதித்தால்
மறுபடியும் ஓடும் அங்கே
தமிழன் இரத்த ஆறு....!!
ஆக்கம்:-இளங்கவி (யாழ் இணையம்)
முக்கிய அறிவிப்பு:- இளகிய மனமுள்ளவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது. (கொடூரத்தைப் படிக்க / பார்க்க)
@ஆய்தன்:-
இரத்தம் உறைகிறது..
குலை நடுங்குகிறது..
இதயம் வெடிக்கிறது..
உயிரின் வேர்வரை துடிக்கிறது..
என் ஈழத்துத்
தொப்புள்கொடி உறவின்
உயிர்பலி..
மரணவலி..!!
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009
கதற வைக்கும் காட்சிகள்..!!

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன். (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
எங்கு சென்றினும் எங்களுக்கேன் இந்நிலை
எதிரிக்கும் வாய்த்திடலாமோ எங்கள் நிலை!!
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)