புதன், 23 செப்டம்பர், 2009
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
தமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்
தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்குத் கவிஞர் தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு; இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாகச் சொல்பவர் தாமரை.
ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார்.
சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்.
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் அமைதிப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார்.
குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாய்க்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார். (விரிவாக)
@நன்றி:தமிழன்பன் பக்கம்
@ஆய்தன்:-
நாம் தமிழர்
நம் மறை திருக்குறள்
உண்மையறி தமிழா
உணர்ந்துகொள் தமிழா
எழுதியோன்:
ஆதவன்
4
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
திங்கள், 7 செப்டம்பர், 2009
புதன், 2 செப்டம்பர், 2009
உலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உலகிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்திற்குச் சொந்தமானது.
உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி. (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
விதியே, விதியே, தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ? -பாரதி
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



